” மலர்ப் பண்பாடு “ - பூவுக்கு எத்தனை பெயர்கள்? Tamil Botany
1 அரும்பு : காலையில் அரும்பிய நிலை
2 நனை - வெளியில் தெரியத்தொடங்கி வெளிச்சத்தில் நனையும் நிலை
3 முகை –முத்துப்போல்ஆகும் நிலை
4 முகிழ் – நறுமணத்துடன்முகிழ்த்தல்
5 மொட்டு –கண்ணுக்குத் தெரியும் மொட்டு
6 போது –மலரும் பொழுது காணப்படும்
புடைத்த நிலை
7 மலர் – மலர்தல் செய்யும் நிலை
8 பூ –முழுமையாகப் பூத்த மலர்
9 வீ – தரையில் உதிரும் பூ
10 பொதும்பர்– பூத்துக் குலுங்கும் நிலை. .
11பொம்மல் – தரையில் உதிர்ந்த புதுப் பூ
12செம்மல் – தரையில் உதிர்ந்த பூ சிவந்து அழுகும் நிலை.
”காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந்நோய்” என்று வள்ளுவர் உருவகிக்கிறார்.
நாம் இன்று பூக்களை அந்த அளவுக்கு நுட்மாகக் கவனிக்கும் ஆற்றலை இழந்து
விட்டோம். அதனால் பூவின் பல பெயர் சொற்களை நாம் இழந்து வருகிறோம்.
-இந்திரன்
No comments:
Post a Comment