முகுந்த் நாகராஜன் கவிதை ஒன்று மனதை பிசைந்தது..அது உங்களையும் பிசையட்டும்...
நன்றி: சென்னை தமிழன்
பினாயில் தண்ணீர் தெளித்த தரையை
ஈரம் போகத் துடைக்கிறது
எண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்
தொட்ட கையைத் துடைக்கிறது
பூஜை பாத்திரங்களை எல்லாம்
சுத்தப்படுத்தி வைக்கிறது
டி.வி. டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை
தூசு தட்டி வைக்கிறது
எறும்பு புகுந்த பண்டங்களை
வெயிலில் உலர்த்த உதவுகிறது
இப்படி
வீடு முழுக்க வேலைகளை
செய்துகொண்டு இருக்கிறது
செத்துப்போன பாட்டியின் புடவை
No comments:
Post a Comment