Sunday, 25 December 2016

பெரியார்

*தபசு செய்யுங்கள்*

படுக்கையில் இருந்து எழும்போது, இன்று உங்கள் சுயமரியாதைக்கு என்ன செய்வது என்று யோசியுங்கள்! ஒன்றும் செய்யாத நாளை வீணாய்ப் போனதாக, உங்கள் வாழ்நாளில் ஒன்று குறைந்ததாகவும் நினையுங்கள். ஒவ்வொரு வாலிபரும் தங்கள் கடமையை உணருங்கள், உங்கள் சுயமரியாதைக்கு உங்கள் உயிரைக் கொடுக்கும் பாக்கியத்தை அடைய தபசு இருங்கள்.

  *-ஈ.வே.ராமசாமி என்கிற நான்*
பெரியார் ஈ.வெ.ரா. தமிழகம் தந்த மாமனிதர். ஈராயிரம் ஆண்டுகளில் தமிழகத்தில் யாராலும் பேச முடியாத விசயங்களை பேசியவர். நடந்து செய்து காட்டியவர். ஆயிரம்மாயிரம் ஆண்டுகளாய் சமூகத்தில் இருந்து வரும் சனாதான மூடநம்பிக்கைகளை எதிர்த்துப் போராடிய மகத்தான போராளி. மேல்சாதி அகம்பாவங்களுக்கெதிராகப் பொங்கி எழுந்து அதற்குச் சாட்டையடி கொடுத்தவர். தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், சாதியத்திறகெதிராய் சளைக்காமல் சண்டை நடத்தியவர். மக்களால் மறக்க முடியாதவர். அதனால்தான் ஈ.வெ.ரா. அவர்களுக்குப் பெரியார் என்ற பட்டம் நிலைத்துவிட்டது. அது காலாகாலத்திற்கும் அழியாது நிற்கும்.

"நாதசுரக்குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்...."

         *-பெரியார்*
"நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்...."

  *-பெரியார்*
வாழ்ந்த காலத்தில் அவர் பேசப்பட்டதைப் போலவே ஏசப்பட்டவர். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் பேசப்படுகின்ற, விமர்சிக்கப்படுகின்ற கட்டாயத்தை வரலாற்றில் ஏற்படுத்தியவர் *தந்தை பெரியார்*

#நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக்கொடுக்கப் போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதி கற்கவும் கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத்தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது.

    *பெரியார்*

No comments:

Post a Comment