Tuesday, 28 February 2017

நரன்-நன்றி பாரத்

💥அப்பா சிறுநீரக கோளாறால் இறந்தார் .
புதைபட்டப்பின் கல்லறைக்குள்ளும் அப்படித்தானா  தெரியவில்லை  .
கல்லறையின் வெளியே நீர் கசிவு இருக்கிறது .

💥அம்மா இறுதி தருவாயில் மூட்டு நோவினால் அவதிப்பட்டாள்.
கல்லறைக்குள்ளிருந்து மேல் நோக்கி வீங்கி இருப்பது
அவளின் மூட்டாய் கூட இருக்கலாம் .

💥கிருபாகரன்  டாக்டரின் கல்லறை  தென் கடைசியில் இருக்கிறது .
அவரின் கல்லறையை சுற்றிலும் தான் எல்லா கல்லறைகளும் ...

💥இன்னும் டோக்கன் நகர மாட்டேனென்கிறது .

-நரன்.

No comments:

Post a Comment