💥அப்பா சிறுநீரக கோளாறால் இறந்தார் .
புதைபட்டப்பின் கல்லறைக்குள்ளும் அப்படித்தானா தெரியவில்லை .
கல்லறையின் வெளியே நீர் கசிவு இருக்கிறது .
💥அம்மா இறுதி தருவாயில் மூட்டு நோவினால் அவதிப்பட்டாள்.
கல்லறைக்குள்ளிருந்து மேல் நோக்கி வீங்கி இருப்பது
அவளின் மூட்டாய் கூட இருக்கலாம் .
💥கிருபாகரன் டாக்டரின் கல்லறை தென் கடைசியில் இருக்கிறது .
அவரின் கல்லறையை சுற்றிலும் தான் எல்லா கல்லறைகளும் ...
💥இன்னும் டோக்கன் நகர மாட்டேனென்கிறது .
-நரன்.
No comments:
Post a Comment