Tuesday, 28 February 2017

நன்றி ;பாரத்

💥"இரவு உணவை உட்கொண்டுவிட்டு
குறுக்கிமொடக்கி படுத்திருக்கும் நீயும்

புகைத்தபடி அமர்ந்திருக்கும் நானும்
வாசலென அறியுமிந்த நிலம்
இதுபோல எத்தனை இரவுகளை
பார்த்திருக்கும்

💥இன்றைய பகலேபோல எத்தனை
பகற்பொழுதுகளையும் பார்த்திருக்கும்

💥ஐம்பது மாசிகளுக்கு முன்
இந்த நிலம் இருந்தது
நீயும் நானும் இல்லை
ஐம்பது மாசிகளுக்குப் பின்பும்
இந்த நிலம் இருக்கும்
நீயும் நானும் இருக்கப் போவதில்லை!

💥இப்போது புரிகிறதா ஜிம்மி?

இந்த நிலம் ஏன்
குரைப்பதுமில்லை
கவிதையெழுதுவதுமில்லையென.

            -சு.வெங்குட்டுவன்.!!

-இசையோடு வாழ்பவன் தொகுப்பிலிருந்து

No comments:

Post a Comment