*கல்யாண்ஜி*
💥காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.
💥வீட்டு நடையில்
நின்றுகொண்டிருந்தேன்.
அருகில் வந்து
ஒரு கருப்புக் கன்றுக்குட்டி
அசையாமல் என்னைப் பார்த்தது.
போய்விட்டது.
இது போதும் எனக்கு
இன்றைக்கு.
-கல்யாண்ஜி.
No comments:
Post a Comment