Monday, 29 May 2017

கல்யாண்ஜி

*கல்யாண்ஜி*

 

💥காக்காய் கத்தி

இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.

காதில் விழவே காணோம்

உப்பு விற்கிறவரின் குரல்,

கோலப்பொடி விற்கிறவரின் குரல்.

என்னவோ ஆகத்தான் போகிறது

இந்த உலகத்துக்கு

இன்றைக்கு.

💥வீட்டு நடையில்

நின்றுகொண்டிருந்தேன்.

அருகில் வந்து

ஒரு கருப்புக் கன்றுக்குட்டி

அசையாமல் என்னைப் பார்த்தது.

போய்விட்டது.

இது போதும் எனக்கு

இன்றைக்கு.

-கல்யாண்ஜி.

No comments:

Post a Comment