Thursday, 23 November 2017

மணிகண்டபிரபு

ட்விட்டர் இணையதளத்தில் எதெச்சையாக நுழைந்தேன். இதுவே என் முதல் ட்விட் லாங்கர். என் நினைவில் ரசித்த பல ட்விட்டுகளை தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்க உள்ளேன்.ரசனை தாகம் உடைய அனைவருக்கும் ஒரு சிறு புன்னகை பூக்குமென நினைக்கிறேன்.இதில் என்னுடையதும் பல ரசித்ததும் பகிர்கிறேன்
*தோற்ற இடமே வெற்றியின் தோற்ற இடம்
*வெளுத்ததெல்லாம் பால் அல்ல, பழைய சட்டை
*உலகில் அதிகம் பேர் இறக்கும் இடம் படுக்கையே
*குறைவாக பேசுங்கள், உங்களுக்கு நிறைய நண்பர்கள் கிடைப்பார்கள்
*கண்ணதாசன் இறந்ததற்கு காரணம் மதுவருந்தியது.இதை அறிந்து மது வருந்தியது
*ஒரே கருப்பு பேன்ட்டுக்கு ஐந்து சட்டை பயன்படுத்துபவன் தான் மிடில் க்ளாஸ்
*நீந்த தெரிந்தும் மூழ்கி விடுகிறேன் - கடனில்
*'ல'கரம் மாறியதால் விளை நிலம் விலை நிலமானது
*எல்லாரும் அறியாதவர்களே, வெவ்வேறு விஷயங்களில்
*குறுக்கு வழியை என்றும் பயன்படுத்தாதவர்கள் ஆட்டோ/கார் ட்ரைவர்களே
*தந்தி கூட ஒழிந்துவிட்டது, ஆனால் வ'தந்தி ஒழியவில்லை
*விதவையான தயிர்சாதம் சுமங்கலியானது ஊறுகாயின் வரவால்
*கோடையில் குளிர்ந்த காற்று குடிநீர் குழாயில்
*மன்னிப்பு கொடுக்கப்படுவதை விட கேட்கப்படும் போது சுகமாக உள்ளது
*துணை இழந்தவுடன் உடன் கட்டை ஏறிவிட்டது செருப்பு
*அப்பா இறந்தவுடன் சகுனம் பார்ப்பதை விட்டுவிட்டோம், எதிரில் வருவோரெல்லாம் அம்மாவாக தெரிவதால்
*அழகை விலைக்கு வாங்க காலத்தால் மட்டும் முடியும்
*தமிழிலேயே அர்ச்சனை நடக்கும் இடம் வீடுதான்
*பிச்சைக்காரர் நம்புவது கடவுளை அல்ல,பக்தர்களையே
*விண்ணை முட்ட உயர வேண்டுமானால் வெந்துதான் ஆகவேண்டும்- சூளையில் செங்கல்
*பரிதாப்படும் நிலையில் இருப்பதை விட, பொறாமைப்படும் நிலையில் இருப்பது மேல்
*காலையில் வாங்கப்படும் பாக்கெட் பாலில் தொடங்குகிறது ப்ளாஸ்டிக்கின் அன்றாட வாழ்க்கை
*நீதி தாமதமாக வரும் ரயிலுக்கு சமம்
*அவமதிப்பை புரியவும் அவமானப்பட வேண்டியுள்ளது
* தொடுவதற்கு சண்டை,பின் தொட்டதுக்கெல்லாம் சண்டை
*உன் எதிரியின் எதிரி நீதான்

#நண்பர்களே, என் நினைவுக்கு எட்டியதை பதிவு செய்துள்ளேன்.பிழை இருந்தால் மன்னிக்க. இங்கு உள்ள துரோனர்களிடம் இருந்து நித்தமும் கற்றுக் கொண்டிருக்கும் ஏகலைவன்
@manipmp

No comments:

Post a Comment