கயிற்றரவு என்றால் என்ன?”
”அடிப்படையான கேள்வி. சங்கரர் கேள்விப்பட்டிருப்பீர்கள்”
“ஆம்…ஓரளவு”
“இங்கே கேரளத்தில் காலடியில் பிறந்த மேதை அவர். உங்கள் ஷெல்லிங், ஹெகல் போல தூயகருத்துமுதல்வாத தத்துவத்தை சொன்னவர். அதற்கு அத்வைதம் என்று பெயர்” என்றார் நடராஜ அய்யர் ”இந்த பிரபஞ்சம் வெறும் மாயத்தோற்றம் என்று அவர் சொன்னார். நாம் நம்முடைய மனமயக்கத்தால் இதை உண்மையானது என்று எண்ணுகிறோம். அதை விளக்க அவர் சொன்ன உதாரணம்தான் கயிற்றரவு”
“ஹும்” என்றார் பென்னி ஆண்டர்சன்
“மங்கலான வெளிச்சத்தில் நாம் செல்கிறோம். பாதையில் ஒரு கயிறுகிடக்கிறது. ஒருகணம் அதை நாம் பாம்பாக நினைக்கிறோம். அந்தக்கணத்தில் அது பாம்பேதான் இல்லையா? நம் உடல் அஞ்சி புல்லரித்துவிடுகிறது” என்று நடராஜ அய்யர் உற்சாகமாகச் சொன்னார் “அதன்பின் நாம் தெளிவடைகிறோம். அது கயிறு என்று தெரிந்ததும் பயம்போய்விடுகிறது, அது கயிறாகவே தெரியத்தொடங்குகிறது”
-ஜெயமோகன்
No comments:
Post a Comment