கற்றதும் பெற்றதும்-11
*மணி
ரூமி
"தாகித்தவர் இவ்வுலகில்
தண்ணீரை தேடுகின்றார்
தண்ணீரும் தேடிக்கொண்டிருக்கிறது
தாகம் கொண்டவர்களை".
வாழ்வியலை தத்துவத்தோடு இணைத்து சொல்லும்போது சொற்கள் மகத்துவம் பெற்றுவிடுகின்றன.அவ்வாறு
தான் ரூமியின் சொற்களும் காலம் கடந்து தாகம் கொண்டவர்களை தேடி வந்திருக்கிறது."அன்பு எதனை தொட்டாலும் புனிதமாக்குவது போல" ரூமியில் எந்த வரியை படித்தாலும் அதில் ஒரு தத்துவ ஞானம் இருக்கிறது.
#ரூமியை தெரியுமா என சிலரிடம் கேட்டபோது சிலர் நடிகையா என்றனர், சிலர் அவர் ஐ.டி கொடுங்கனு முக்கால்வாசி பேருக்கு யாரது வானம்பாடி கவிஞரா என்றனர் சிலர்.மற்ற ஒருவர் கலீல் ஜிப்ரானை தெரியுமானு கேட்டுட்டு ரூமியை தெரியுமானு கேளுங்க என்றார்.மைக்கெல் மதன காமராஜனில் காமேஸ்வரன் கமல் சொல்வார் "எனக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பு, மளிகைகடை,வரதுகுட்டி என்பார். அதுபோல் ஆகிவிட்டது.
#ஜலாலுத்தின் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆங்கிலம் வழங்கும் பகுதிகளில் ‘ரூமி’ என்றும் அறியப்படுகிறார்.
#தாகங்கொண்ட மீனொன்று
தேர்ந்தெடுத்த கவிதையை என்.சத்தியமூர்த்தி அழகாக கொடுத்திருக்கிறார்.மேலும் இணையத்திலும் இவரின் வரிகள் அதிகம் வாசித்ததில் மனதில் பெருகும் உற்சாகத்திற்கு ஈடு இல்லை. "ஒரு மனிதனைச் சொற்களால் தொடுகிற அனுபவம் உன்னதமானது.சொல் வெளிச்சம் தரக்கூடியது. பேச்சின் நடுவில் இருந்து ஒரு வாக்கியம்,ஒரு சொல் ஒருவரின் மனதில் சென்று சேகரமாகிவிட்டால் போதும்,அது முத்தைப் போல விளைந்து ஒளி வீசத்துவங்கும்.பேச்சின் வலிமை அப்படியானது என்பார்-எஸ்.ரா. அதுபோல் ஒவ்வொரு சொல்லும் விதைநெல் போல் இருக்கும்.
*தொடர்ந்து தட்டிக்கொண்டே இரு.
உள்ளிருக்கும் ஆனந்தம்
என்றேனும் சாளரத்தைத் திறந்து
எட்டிப்பார்க்கும்
எவர் வந்திருக்கிறார் என.
*நாம் பேசும் இவ்வார்த்தைகளுக்காகவே உருமாறுகிறோம் நாம்,
*உன்னைக் கண்டதும்
வெறுமையடைகிறேன்
இந்த வெறுமை
இருத்தலினும் மிக அழகானது.
அது இருத்தலைச் சுவடின்றி அழிக்கவல்லது.
ஆயினும் அது வளரும்போது
இருத்தலை வனப்புறச் செய்து
மேலும் உருப்பெற வைக்கிறது
*ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது தான் ஒளிரச் செய்த எதையுமே எடுத்துச் செல்வதில்லை
*காற்றுக்கு காதல்
கொடி தாங்கும் கம்பத்தின் மீதே
கொடி மீதல்ல.
காதலின் சாரம் அதுவே
*எனது வார்த்தைகள் களைத்து போனவர்களுக்கு அல்ல,கடல் அளவு தாகம் கொண்டவர்களுக்கு
#மனதை தொட்ட வரிகள்
ஆசை கொண்டவனின் இரவு சமாதானம் செய்து கொள்வதில்லை
கோபம் என்பது வலுவான காற்றைப் போன்றது சற்று நேரத்தில் தணிந்துவிடும் ஆனால் அதற்குள் பல மரங்களின் கிளைகள் அது முறித்துவிடும்
இருவரின் ஆத்மாவும் உண்டென்பதால் நமக்குள்ளே நாம் தோன்றி மறையும்
இரண்டு கண்களை மூடுங்கள் மற்ற கண்களால் பாருங்கள்
புரிதலால் விளைவதே நேசம்
உன்னிடம் அதிகம் இருந்தால் செல்வத்தைக் கொடு குறைவாக இருந்தால் இதயத்தை கொடு
வாசிப்பின் மூலம் நீ கற்றுக் கொள்வாய் ஆனால் அன்பின் மூலம் தான் புரிந்து கொள்வாய்
நீ உனக்குள் நீ பயணிக்கும் நெடும்பயணம் நீ
தனித்திருப்பதாய் எண்ணாதே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் உன்னில் உள்ளது
நம்பிக்கை இழக்காதே அதிசயங்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை
இனிதான நாட்கள் நம்மைத் தேடி ஒருபோதும் வருவதில்லை நாம் அதை நோக்கி நடக்காதவரை
உன்னோடு நான் இருக்கும்போது
கண்விழித்த வண்ணம் கழிகிறது என் இரவு
வானம் நோக்கிய பாதை உனக்குள் இருக்கிறது
அன்பின் சிறகுகளை மட்டும் இயக்கு
-ரூமி
வாசிப்பின் சாளரத்தை திறந்திடுவோம்
-தொடரும்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment