Monday, 6 August 2018

கற்றதும் பெற்றதும்-12

கற்றதும் பெற்றதும்-12

*மணி

அதிகாரத்தைப் புரிந்துகொள்வதற்கும், எதிர்கொள்வதற்கும், அதிலிருந்து மீள்வதற்கும் சிந்திப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை

-சுகுணா திவாகர்

*சிந்திப்பதை தவிர வேறு வழி இல்லை-எதிர் வெளியீடு

கட்டுரை என்பது ஒரு கருத்தை முன்வைத்து விவாதித்து தேவையான தருக்கங்களுடன் விளக்கி அதனை கூறும்போது. அது மேலும் மெருகேறுகிறது.

இத்தொகுப்பை படிக்கும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது..

" கடவுள் மனிதனைப் படைத்ததும் அவனுக்கு இரண்டு கூடைகளை கொடுத்தார். ஒன்றைப் பிறர் தவறுக்கும் மற்றொன்றை தன் தவறுக்கும் வைத்துக் கொள்ளச் சொன்னார். மனிதன் அக்கூடைகளை கழுத்தில் போட்ட போது,பிறர் தவறு கூடை முன் பக்கமும், தான் தவறு கூடை பின் பக்கமும் போய் விட்டது. எனவே தான் பிறர் தவறு கூடையை மனிதனின் பார்வையில் எப்போதும் இருந்து வருகிறது. நம் தவறு கூடைகளை நாமே மறைத்து கொள்கிறோம்"!

நவீன தமிழ் எழுத்தின் மாற்றத்தை வரிசையாக எடுத்துரைக்கும்போது நவீன இலக்கியத்தின் துவக்கத்தில் நிலவிய மேட்டுக்குடி மனப்பான்மை மற்றும் சமஸ்கிருத ஆதிக்கம் குறித்து பதிவு செய்கிறார்.மணிக்கொடியில் 1933 தமிழ்க்கவி,சங்கங்கள் எனும் இருகவிதை எழுதியவரை பாரதிதாஸன் என இருப்பதில் சமஸ்கிருத ஆதிக்கத்தை கூறுகிறார்.

பெண் பேச்சும் மெளனமும் கட்டுரையில்..

பெண் என்பவள் பேச்சாலும் மௌனத்தாலும் கட்டப்பட்டவள்.  ஒரு இடத்தில் பாலினத்தின் தெளிவான வரையறைகளை வித்தியாசங்களை கட்டமைப்பின் மூலம் நிலவும் சமூக இருப்பை மேலும் உறுதி செய்கிறாள் பெண். "ஒரு பெண் குழந்தையை வளர்க்கும் போது தன்னையொத்த மற்றொரு அடிமையை இந்த சமூகத்திற்கு உருவாக்கி தருபவளாகவும், ஒரு ஆண்குழந்தையை வளர்க்கும் போது தன்னையொத்த அடிமைகளை நிர்வகிக்கிற, ஒடுக்குகிற, மேலாண்மை செய்கிற இன்னொரு ஆண் என்னும் ஆண்டானை உருவாக்கி தருபவளாகவும் தாய் இருக்கிறாள்.

இத்தகைய பாலியல் ரீதியான வேறுபாடுகள் மட்டுமல்லாது சாதிய வர்க்க இன வேறுபாடுகளை தொடக்க நிலையில் துல்லியமாக தாயாலேயே போதிக்கப்படுகிறது. உண்மையில் தாய் வகிக்கும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்தபோதும் புனிதமாய் உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் அதிகாரம் தன்னைக் கட்டமைத்துக் கொள்கிறது.

#"தமிழரின் அரசியல் அடையாளம் பகுதியில் சமஸ்கிருத மொழி குறித்த கருத்துகளை பகிர்தலோடு அக்காலத்தில் பள்ளிகளில் போதித்த தமிழுணர்வு பற்றி கூறும்போது..

அரசியல் உணர்வுடைய இந்த மாணவர் சக்திக்கு வினையூக்கியாக இருந்தவர்கள் அரசு பள்ளி ஆசிரியர்கள். குறிப்பாக தமிழ் ஆசிரியர்கள் வகுப்பறைகளை பாடப் புத்தகங்களைத் தாண்டி தமிழுணர்வு, பகுத்தறிவு, பொதுவுடமை ஆகியவை குறித்து பேசினார்கள். அரசு பள்ளிகளில் படித்த சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்படிப்பட்ட ஒரு ஆசிரியரை ஆவது தங்கள் கல்வி வாழ்க்கை சந்தித்திருப்பார்கள் ஆனால் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.இந்தி திணிப்பை எதிர்த்த பாரம்பரிய தமிழகத்தில் இந்தி படிக்காமல் தப்பிக்கவே முடியாது என்பதுதான் யதார்த்தம்.

# ஒழுக்கம் என்று சொன்ன உடனேயே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது குடிக்கக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, திருடக்கூடாது, பொய் சொல்லக்கூடாது. இந்த கூடாது பட்டியலில் பிறப்பின் அடிப்படையில் யாரையும் ஏற்றத் தாழ்வாக கருதக்கூடாது, பிறர் உழைப்பை சுரண்டக்கூடாது,  ஆகியவை இடம் பெறவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.

#மனதை கவர்ந்த வரிகள்

* எப்போதுமே முதலாளித்துவம் சின்னச்சின்ன அடையாளங்களை அழித்து விரிவான சந்தையை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டது

* சேரி என்றால் சேர்ந்து வாழும் இடம் என்றுதான் அர்த்தம்

*ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனதின் எடையை குறையவில்லை
(வெள்ளையானை)

* பரிவு உணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய உயர்வான மனநிலையில் இருந்து மேலிருந்து கீழ் பார்க்கும் உணர்ச்சி. ஆனால் நீதி உணர்ச்சியோ குற்ற உணர்ச்சியோடு தன்னிலை குறித்த விசாரணையை மேற்கொள்வதால் எழும் உணர்ச்சி

* சாதி எல்லா நவீன மாற்றங்களுக்கும் ஏற்றார் போல் தன்னை மாற்றிக் கொள்கிறது

* வெறுமனே சமூகநீதி மட்டும் பெரியார் கொள்கை அல்ல சாதி ஒழிப்பு தான் பெரியாரியத்தின் அடிப்படை

*அடிக்கடி ஏன் முகம் பார்க்கிறேன் இழந்துவிடுவேன் என்பதாலா?

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment