Monday, 22 October 2018

கற்றதும் பெற்றதும்-53

கற்றதும் பெற்றதும்-53
*மணி

*மண வாழ்க்கை வெற்றியடைய இருவர் தேவை;தோல்வியடைய ஒருவர் போதும்

#இல்லறம்
-அப்துற்-றஹீம்

இல்லறம் குறித்து எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் 1960ல்  அப்துற் றஹீம் எழுதிய இப்புத்தகம் அருமையானது.இல்லறம் குறித்த அனைத்து பொன்மொழிகளையும் மேதைகளின் வாழ்வில் நடந்தவற்றையும் சுவைபட எழுதியிருப்பார்.இல்லறம் குறித்து பள்ளிப்பருவத்தில் படித்த ஓ ஹென்றி எழுதிய christmas gift கதைதான் நினைவுக்கு வருகிறது. வறுமையில் வாடும் ஒரு தம்பதிகள்.கிறிஸ்மஸ் வருகிறது. தன் மனைவிக்கு பரிசு தர எண்ணி அவளுக்கு ஒரு தலை முடியை ரசிக்கும்பொருட்டு அழகிய ப்ளாட்டின் சீப்பு வாங்க தன் கடிகாரத்தை விற்று வாங்குகிறான்.தன் கணவனுக்கு பரிசு அளிக்க விரும்பி தன் தலைமுடியை விற்று வாட்ச் ஸ்டிராப் (கடிகார சங்கிலி) வாங்குகிறாள்.

ஒருவரையொருவர் சந்தித்து பொருள் மாற்றபோது தான் தெரிகிறது ஒருவருக்கும் உபயோகமில்லையென. இருப்பினும் என்ன கொடுப்பதற்கு அன்பு இருப்பதென கருதி கொண்டாடுவதாய் கதை முடியும். அந்த அன்புதான் இல்லறத்தின் மைலெஜ் கொடுக்கும் ஆயில்.இப்புத்தகத்தில் நான் ரசித்ததில்.சில

#இல்லறம்

ஒரு தேவதை ஆணையும் பெண்ணையும் ஒன்றாய் படைத்தது. மற்ற தேவதை வந்து பிரித்துவிட்டதால் தங்களின் மற்றொரு பாதியை கண்டுபிடிக்கும் வரையில் தேடி அலைந்து கொண்டிருப்பதாய் ஒரு கதை. திருமணம் செய்து கொள்வதன் அவசியத்தை கூறும்போது வரலாற்றாளர் மன்னர்களை மேற்கோள் காட்டி இளமை மனம் ஒழுக்கத்திற்கு வழிகோலும் என்றார்.காதலே சிறந்தது என்பதற்கு பைரனின் வரியான "ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணோடு வாழ்வதைவிட அவளுக்காக இறந்துவிடுவது எவ்வளவோ எளிதானது! என காதலைவிட இல்லறதின் மேன்மையை கூறுகிறார்.

#இல்லறம் புகும் முன்

திருமணத்தில் அழகு மிக முக்கிய இடம்பிடிக்கிறது.அழகு குறித்து விரிவாய் கூறி ஒவ்வொர் ஆணும் பெண்ணும் தன்னுடைய அழகுக்கேற்றவரை மணக்கலாம். ஒரு அறிஞர் சொன்னது போல் இருவகை மணமுண்டு. ஒன்று நீ காதலுக்காக மணமுடித்தால் நல்ல இரவையும் கெட்ட பகலையும் பெறுவாய். பணத்துக்காக மணமுடித்தால் மகிழ்ச்சிகரமான நாட்கள் இல்லாமல் போய்விடும்.துன்பநாட்கள் இருக்காது

#மணப்பெண்

பெண் முத்தைப்போன்றவள். கடலில் இருந்து என்ன பயன். மாலையாக அணியப்பெற்றால் தான் பெருமை.புகுந்தவீட்டில் சென்றபின் சில நாள் கழித்து ஒரு சலசலப்பு வரும்.மனைவிக்காக பேசுவதா,மதருக்காக பேசுவதா என குழம்பி அமைதி காக்கும்போது ஊர் அவனை பேசும்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குனு சைலன்ட் மோடுல சந்திராயானுக்கே ராக்கெட் விடும்.அனுபவம் வந்துவிடுகிறது.

தோட்டா எழுதிய துணுக்கு "மனைவி பக்கமா,அம்மா பக்கமானு வரும்போது பீரோ பக்கம் நிற்பவனே உண்மையான கணவன்.

இந்த இடத்தில் கிருஷ்ணன் நம்பி எழுதிய மாமியார் வாக்கு கதை நினைவுக்கு வருகிறது. ஊர்ல எலக்சன் வரும்.மாமியார் ஒருகட்சிக்கு ஓட்டு போட்டுட்டு மருமகளையும் அதே சின்னத்துக்கு ஓட்டுப்போட சொல்கிறார்.

மருமகள்  இவ்விசயத்தில் கறாராய் நான் வேறு கட்சிக்குதான் ஓட்டுபோடுவேன் என முடிவுசெய்து ஓட்டுப்பெட்டி வரை சென்று இறுதியில் மாமியார் சொன்ன கட்சிக்கே ஓட்டுப்போடுகிறார். மாமியார் வாக்கினை நிறைவேற்றுவதாய் கதை முடியும்.

#ஐந்திணை ஐம்பதில் பலராலும் மேற்கொள் சொல்லும் பாடல்

சுணையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சம் சுரம் என்ப காதலர்

உள்ளம் படர்ந்தநெறி

-தாகத்தால் அலைந்த இரு மான்கள் தத்தம் இணைகள் குடிக்க வேண்டுமென இருக்கும் சிறிது நீரில் வாயை மட்டும் வைத்து குடிக்காமல் இருக்கும் அற்புதக்காட்சி.

#ஒரு பெண்ணின் நா தான் அவளுடைய வாள்;அதனை அவள் துருப்பிடிக்க அனுமதிப்பதே இல்லை.அதனை நல்வழியில் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதை புத்தகம் முழுவதும் அதிக மேற்கோள்களுடன் சொல்லியிருப்பார்.ஆழம் விழுதுகள் போல்

உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.மற்றுமொரு கவியரசரின் வரிகள்

"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்.அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment