கற்றதும் பெற்றதும்-54
*மணி
பழக்கத்தில் 'நல்ல பழக்கம்',
'கெட்ட பழக்கம்' என்று இல்லை.
'விடக்கூடிய பழக்கம்',
'விடமுடியாத பழக்கம்'
இப்படி இரண்டுதான்.
-அ.முத்துலிங்கம்
#அ.முத்துலிங்கம் கட்டுரைகள்
அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளாகட்டும்
கதைகளாகட்டும் எப்போதும் சுவாரஸ்யமானவை.அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறிய அத்தனை அம்சங்களும் இவரின் எழுத்துக்களில் இருக்கும்.போகிற போக்கில் ஒரு செய்தியை தட்டிவிட்டு போவார்.அவ்வாறு ஒரு இடத்தில்
" அந்தக் காலத்தில் பாடல்களை ஏடுகளில் எழுதி பாதுகாப்பார்கள். பழைய ஏடுகள் ஒடிந்தும், முறிந்தும் செல்லரித்தும் கிடக்கும். பாடல்களில் பாதி அழிந்துபோயிருக்கும். அவற்றை ஒட்டி கொடுப்பதற்கென்றே சில புலவர்கள் இருந்தார்கள். சொந்தமாகப் பாட அவர்களுக்கு வராது ஆனால் விடுபட்ட வரிகளை ஊகித்துப் பாடிவிடுவார்கள்.ஒட்டிக் கொடுப்பதால் அவர்களுக்கு "ஒட்டக்கூத்தர் என்று பெயர்
#கடன் அட்டை
ஒருகாலத்தில் கிரேடிட் கார்டு வாங்க வங்கியில் தவமிருக்கனும். உங்க ப்ராஜெக்ட் வால்யூ என்ன என்பதுபோல் உங்க வருமானம் எவ்வளவு னு கேட்டு துரத்துவார்கள். அ.மு கனடாவில் கடன் அட்டை வாங்கிய அனுபவத்தை எழுதியிருப்பார்.
இந்த நாட்டில் கடனாளிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுகொண்டு கடன் அட்டை வாங்க விண்ணப்பித்தார். ஆனால் வங்கியில் மறுத்துவிடுவார்கள். பின் ஒருவழியாய் வாங்கி அதை உரசும்போதெல்லாம் ஏற்படும் உள்ளூர பயத்தை அனுபவித்து விளக்கியிருப்பார்.
#சூப்பர் மார்க்கெட் அனுபவத்தை கூறும்போது, சில பெண்கள் லிஸ்ட் நடைவழி ஒழுங்கின்படி லாவகமாக எடுத்து அடுக்குவர்.சில பொருட்கள் முடிவுதேதி 30ஜூன் 2002 என இருக்கும்.ஒரு நாள் முன்பு கூட துல்லியமாய் இருக்கும்.ஓர் இரவு முடிந்தவுடன் பாவனை மீறிவிடும் என எள்ளலுடன் கூறுவார்.
இன்னும் ஒரு விதி இருக்கிறது உங்கள் உடம்பிலிருந்து உயிர் பிரிவதாய் இருந்தாலும் இரண்டு சாமான்கள் மட்டும் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் நுழையக்கூடாது. இரண்டு வாங்கினால் ஒரு சுத்தியல் இலவசம் என்று இருக்கும் வாங்கிவிடுவீர்கள். இலவசத்தை கண்கள் கண்கள் அகலமாக விரியும்.
#கால்சட்டை வாங்குவதை பற்றி கூறும்போது..அ.மு வின் அண்ணன்கள் போட்ட கால்சட்டை அவர்களுக்கு பற்றாமல்போகும்போது இவருக்கு வரும்.வாழ்நாளில் ஒருமுறையாவது இடுப்பு சரியாய் இருக்கும் கால்சட்டை எடுக்க ஆசை.ஆனால் அவ்வளவு வேகமாய் வளர்ந்துவிடுவோம் என டெய்லர் நினைத்து பெரிதாய் தைத்துவிடுவார்.கடைசிவரை அதன் பருமனையோ,நீளத்தையோ நிரப்ப முடியாமல் தவிப்பதை கூறுவார்.
ரெடிமேட் ஆடை பார்த்தால் உயரமும் இடுப்பும் ஒத்துப்போவது கல்யாணத்துக்கு பொருத்தம் பார்ப்பதுபோல்.சீக்கிரம் ஒத்துப்போகாது.இடுப்பு பார்த்தீங்கன்னா 32,34 என இருக்கும். 31 இருந்தா அவ்வளவுதான்.நீங்க பாவம் செய்தவர்கள்
#சுந்தரராமசாமியை அமெரிக்காவில் சந்தித்ததை சிலாகித்திருப்பார்.அவர் படிக்கச் சொன்ன புத்தகத்தை சொல்லியிருப்பார் michio kaku எழுதிய vision,Isaac asimov எழுதிய வேதியியல் புத்தகம்,frank mecourt Angela's ashes குறிப்பிட்டார்.சு.ரா எழுதியதில் பள்ளம் சிறுகதையை குறிப்பிட்டிருப்பார்.
/சினிமா பைத்தியமான தாய் ஆற்றுமணலில் அமர்ந்து சினிமா பார்க்கும்போது குழந்தை கூழாங்கல்லை வாயில் போட்டுக்கொள்ளும்.வாய்க்குள் விரலைவிட்டு எடுக்கும் போது படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் குழந்தையின் கண்ணை நோண்டிவிடுவாள்.பின் அவள் இறந்துபோக அவளின் கண்ணை பிள்ளைக்கு பொருத்துவார்கள்.
அவன் பெரியவனாவதும் கஷ்டமில்லையே என்றதும் ஒண்ணுமில்ல.ஆனா பார்வை இல்லே.பள்ளம்தான் ரொம்பிச்சு என்கிறான் அவன்./
இதை படிக்கும்போது மனம் கணக்காதவர்கள் இல்லை
#தொ.பரமசிவத்தை சந்தித்ததை பிரம்மிப்பாக சொல்கிறார்.சினிமா பாட்டு புக் காலில் பட்டாலும் தொட்டுக் கும்பிடச்சொல்லும் குடும்பத்திலிருந்து வந்தவர் தொ.ப.பரிட்சையில் ஒரு கேள்விக்கு தனக்கு தெரிந்த அத்தனையும் எழுதுவிடுவாராம். இதனால் எல்லா கேள்வியும் எழுதவே இல்லையாம்.
கிறித்தவ பள்ளியில் படிப்பவருக்கு தெரியும்.மாதம் இருமுறை நற்கருணை வீரன் வரும். அப்போது அதை வாங்குபவனை பெரிய இலக்கியவாதி ரேஞ்சுக்கு பார்ப்பார்கள்.வாசிப்பு ஆரம்பித்தது அப்போதுதான்.நான் பிஷப் பள்ளியில் ஆறாம்வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வாங்கினேன். தொ.ப காலணா காசு கொடுத்து வாங்கியதாய் சொல்லியிருப்பார்.
தொ.ப சொல்லியிருப்பார் "இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் சாதி அழிய வாய்ப்பில்லை.உலகமாக்கலின் தாக்கத்திலிருந்து நாடுகள் தப்ப முடியாது.போராடிக் கொண்டிருக்கும் எந்த உயிரினமும் தன்னை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளும்."டாம் மாமாவின் இருட்டறை எனும் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து இலக்கிய பயணத்தை துவங்கிய தொ.ப விடைபெறும்போது வியந்து பார்த்ததை பதிவு செய்கிறார்.
#மனதை கவர்ந்தவை
# மனிதனால் படைக்கப்பட்ட எல்லா பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்க கூடியவையே
* ஆம்புலன்ஸ் போலீஸ் இன்னும் அவசர வாகனங்கள் வந்தால் ஒதுங்கி கரையில் நிற்க வேண்டும்.
*என் புத்திசாலித்தனத்தை ஒழுகாமல் பார்த்துக் கொண்டேன்
*உங்க சட்டை அழகாயிருக்கிறது. ஒரு பேராசிரியரிடம் பேசவேண்டிய முதல் வசனம் அல்ல
#கணிப்பொறிக்குள் நுழைந்துவிட்ட தமிழ்,கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே- குன்றக்குடி அடிகளார்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment