"இருத்தல் என்பதே சிந்தனையை
நிறுவுவதுதான்"
#ஆச்சர்யமூட்டும் அறிவியல்
-ஹாலாஸ்யன்
தினமணிக் கதிரில் தொடராய் வந்த அறிவியல் கட்டுரைகள்.. அன்றாடம் பார்க்கும் காட்சிகள், பொருட்களின் பின்னாலிருக்கும் அறிவியலை சுவாரஸ்யமாய் சொல்கிறது. அறிவியலை பொறுத்த வரை பாமரனுக்கு சொன்னால் தான் பண்டிதனும் புரிந்து கொள்வான்.
#பறவையும் புல்லட் ரயிலும்
பறவையைக் கண்டான்.விமானம் படைத்தான் என்பது போல் புல்லட் ரயிலும் படைத்தது பறவையின் தயவே.1964ல் ஷின்கான்சனின் புல்லட் ரயில் பயன்பாட்டு வந்தது. ஒசாகா-ஃபுகுவோகா இடையில்
515கி.மீ நீளமுள்ள ரயில்திட்டம். துவக்கத்தில் பெரும்சத்தம் உண்டாக்கியது. மின் கம்பியை தொடும் கம்பிக்கு pantograph என பெயர்.காற்றை கிழிக்கும்போது உஷ் என்ற சத்தம் எழுப்பியது. ஆற்றலும் வீணானது.
சரிக்கட்ட வேண்டிய பொறுப்பு எய்ஜி நகாட்ஷூ வுக்கு ஏற்பட்டது. அவர் ஒரு பறவை ஆர்வலர்.3 பறவை அமைப்பை பொருத்துகிறார்.முதலில் ஆந்தை.
ஆந்தையின் சிறப்பே சத்தமின்றி பறக்கும் இறக்கை அமைப்பு இருப்பது.இரவில் பறப்பதால் சத்தமின்றி இரை தேட பறக்கும்போது சத்தம் வராமல் இருக்கும் அமைப்பு கொண்டது..இதன் வடிவமைப்பை மின்சாரகம்பி தொடும் பகுதிக்கு அளித்தார்.
அடுத்து அடில் பென் குயின் பனிக்கட்டியில் உராய்வு இல்லாமல் சறுக்கும்.இதனை ரயில் மின் கம்பிக்கு பொறுத்தினார்.
அடுத்து மீன் கொத்தி.இதன் சிறப்பு கூர்மையான அலகு. ரயில் முகப்பிற்கு பொருத்தினார். சுரங்கத்தில் நுழையும் போது ஏற்படும் சத்தத்தை போக்க மீன் கொத்தியின் அலகு போன்ற அமைப்பை உருவாக்கினார்.நாம் வடிவமைக்கு பொருட்களுக்கு முன்னோடியாய் இயற்கையே கச்சிதமாய் வடிவமைத்துள்ளது வியப்பைத் தருகிறது.
ஒரு சுத்துமிட்டாய் மாதிரி போல் வைத்துக் கொண்டு கருவியை வடிவமைத்து மலேரியா நோய் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிப்பது என அறியாத தகவல்கள் இதில் இருக்கின்றன.
#ரேகை
ரேகை குறித்து சுவாரஸ்யமான தகவல் தருகிறது.loop,arch,whorl விரல் ரேகையில் இருக்கும் மடிப்பு, சுழிவு,வளைவுகள்.இன்றைய ரேகை பரிசோதனை கருவி மேற்சொன்னவற்றை தேடுகின்றன.உ.ம் நம்.ரேகையை தேடி "சுழிக்கு கீழ் செங்குத்தா 2மிமீ தள்ளி ஒரு வளைவு,அங்கிருந்து லெப்ட்ல நாலு மி.மீ தள்ளி மடிப்பு இருப்பதை குறித்து கொண்டு நம்மை அடையாளம் கொள்ளும்.
*முதலில் கேமரா மூலம் படமெடுத்து ஒப்பிட்டு பார்த்தனர்
*அடுத்து capacitive fingerprint sensor கருவி வந்தது.நம் விரல் ரேகைகளை விட,சிறிய மின்தேக்கி மூலம் மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச்செய்து மின்னேற்றம் கொடுத்து விரலை ஒற்றும்போது மேடுபள்ளம் மின்னேற்ற மாறுதல் அடைந்து கைரேகை உள்வாங்கும்.உ.ம் தற்போதைய கைபேசி.
*பின் மீயொலி மூலம் இதே போன்று ஆனால் விரல் ஒற்றும்போது ஏற்படும் எதிரொலிப்பு மூலம்
*விரல் வெட்டியெடுத்து வைத்தால் அது உயிருள்ளதா,உயிரற்றதா என கண்டுபிடித்துவிடும்.ஆனால் தூங்கும்போது ரேகை பயன்படுத்த முடியும்.எலக்ட்ரானிக் தொழில் நுட்பத்தில் பாதுகாப்பு என்பது பொருட்களுக்கில்லை மனதுக்குத்தான்.
#கொரோனா வந்ததிலிருந்து வெப்பநிலை அளந்து அடிக்கடி பார்க்கிறோம்.இதில் ஒரு சந்தேகம் வரும் வெப்பம் மற்றும் வெப்பநிலை. வெப்பம் என்பது பொருளின் மொத்த ஆற்றலின் அளவீடு.வெப்பநிலை என்பது சராசரி ஆற்றலின் வெளிப்பாடு.
எல்லா நீரின் கொதிலையும் நூறு டிகிரி வந்திடுமா என்றால் இல்லை.நான் வகுப்பறையில் பயன்படுத்தும் போது 94 டிகிரியிலயே கொதித்து விட்டது. அதாவது சாதாரண காற்றழுத்த நிலையில் சுத்தமான நீர் உறையும் போது பூஜ்யம், கொதிக்கும்போது நூறு டிகிரி என அளவீடு வைத்திருக்கிறார்கள்.காற்றழுத்தம், நீர் மாறும் போது அளவீடுகள் மாறும்.
உடல் வெப்பநிலையை அளவிட தெர்மாமீட்டர் இருக்கின்றன. தற்போது கேப்ஸ்யூல் மாத்திரை வடிவில் தெர்மாமீட்டர் வந்துவிட்டன.தண்ணீருடன் விழுங்கினால் உள்ளே போய் வெப்பநிலை உணர்ந்து அலையை பரப்பிவிட்டு வெளியேறிவிடும். இது இன்னும் பிரபலமாகவில்லை
#பட்டனைத் தட்டினால்
ரிமோட் பட்டன் பற்றி சொல்லும் போது பல்வேறு கட்டத்துக்கு பின் அகச்சிவப்பு கதிர் பயன்படுத்தப்படுகிறது.
கார் போன் வாகனங்களில் ரேடியோ அலைவீச்சில் இயங்குபவை.இது பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது gesture recognition என்னும் கையசைவு புரிந்து செயல்படும் கருவி வடிவமைத்துள்ளனர்.
#drink and drive
Drink and drive ல ட்ராபிக் போலிஸ்கிட்ட மாட்டாம போறது ஆயக்கலையில் 65வது.breath analyzer எனும் கருவி மூச்சுக்காற்றில் உற்சாகப் பானத்தை கண்டறிகிறது. இதில் 3 வகை உள்ளன
1)ஊதும் கருவியில் பொட்டாசியம் நைட்ரேட் உடன் கந்தக அமிலம் இருக்கும்.ஊதும் காற்றுடன் வினை புரிந்து நிறம் மாறும்.ஆனால் நேரமாகும்
2)அகச்சிவப்பு கதிர் மூலம் காற்று ஊத ஒரு இடம்,ஒருபக்கம் அகச்சிவப்பு கதிர் உமிழும் விளக்கு மற்றொரு முனையில் அகச்சிவப்பு கதிர் விழுங்கப்பட்டிருப்பதை கணித்து கச்சிதமாய் ஃபைன் வாங்கிடலாம்.வேலை ஈசி.
3)நவீனவகை.காற்றிலிருக்கும் ஆக்சிஜனோடு சாராயம் வினைபுரிந்து எலக்ட்ரான் பரிமாற்றத்தில் நுண்ணிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இப்படியும் கண்டுபிடிக்கலாம். இந்தியாவில் இன்னும் வரல.
#கான்க்ரீட்
இம்முறை ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.கான்கிரீட் என்பது aggregate என அழைக்கும் ஜல்லி, சரளைக்கல்,சிமென்ட் மண் கலவை.இதுதான் கடினமும் வலிமையும் கொடுப்பது.
இதற்கான எமன் -விரிசல். விரிசல் விட்டால் காற்றும் ஈரப்பதமும் புகுந்தால் இரும்புக்கம்பி துருப்பிடிக்கும்.
குளிர்வித்தால் விரியும் ஒரே பொருள் நீர்தான். தானே விரிசலை சரிசெய்ய கண்டுபிடித்துள்ளனர். சிமெண்டோடு பாக்டீரியாவை கலந்து அதாவது bacillus psuedofirmus,sporosarcina pastuerii. இரண்டும் காரத்தன்மை.இது சுண்ணாம்பை சுரக்கும் திறனுடையவை.
கால்சியம் லாக்டேட் எனும் பொருளை பாக்டீரியாவுக்கு தின்னக்கொடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.இது சுண்ணாம்பு சுரந்து விரிசலை சரிசெய்யும்.இதுபோல் அடைக்க குறிப்பிட்ட அளவுதான் விரிசல் இருக்க வேண்டும்.
இதுபோல் பயனுள்ள 32 புதுமையான தகவல்கள் அடங்கியுள்ளது.
தொடர்ந்து பகிர்வோம்
No comments:
Post a Comment