Saturday, 10 December 2022

செல்வராஜ் ஜகதீசன்


நிச்சலன முகமோடு 
நின்று அசைபோடும் 
யாதொரு மந்தையை விட்டும் எளிதில் பிரிந்து செல்லாத 
கட்டி இழுத்து வரும்போதும் கம்பீரமாய் நடந்துவரும் 
ஏனிந்த கழுத்தறுப்பு என்று எதிர்கேள்வி கேட்காத 
கிடை ஆடுகள் 
அத்தனை 
ருசியானவையும் கூட.

 -செல்வராஜ் ஜகதீசன்

No comments:

Post a Comment