Wednesday, 20 September 2023

காந்தி


இந்தியாவில் முதலில் காந்திஜி படம் இருக்கவில்லை. முதலில் அசோகச் சக்கரம், அசோகர் தூண் படங்கள் போட்ட ரூபாய் தாள்களே பழக்கத்தில் இருந்தன.

முதன்முதலில் 1996ல் ரிசர்வ் பேங்க் காந்திஜியின் படத்தை அச்சிட முடிவு செய்தது. ஏன் ?

பெரும்பாலான நாடுகள் தங்களது முக்கியமான தலைவர்களின் குளோசப் முகப்படங்களை அச்சிட்டன. இந்திய ரூபாய் நோட்டுக்களில் வேறு படங்கள், கட்டடங்கள் , இயற்கை காட்சிகள்,நினைவு சின்னங்கள் இருப்பது , போலி நோட்டுக்கள் அச்சிட இலகுவாக ஆகிவிட்டது. முகங்களை அச்சிடும்போது , வித்தியாசங்கள் இலகுவாக கண்டுபிடித்து விடமுடியும். அதனால் காந்திஜி முகத்தை தேர்ந்தெடுத்தார்கள்.

ஏன் காந்திஜி முகம் ?

நேரு, பட்டேல், அம்பேட்கர், போஸ், சாஸ்திரி, இந்திரா, மற்றும் எல்லோரையும் அச்சிடலாமே. இவர்களெல்லாம் அரசியல் கட்சி, சிலமாநிலங்களில் மட்டும் புகழ் பெற்றவர்கள்.

புத்தர், சமணர், இந்துக்கடவுள்கள், இவ்வாறு மதங்களை அச்சிட்டால் சட்டப்படி கூடாது. நமது நாடு மதம் சார்ந்ததல்ல.

1996களில் மக்களிடையே பெருமதிப்பு, மரியாதைகளைக் கொண்ட ஒரே தலைவர் மகாத்மா. அதனால் காந்திஜியின் முகத்தைத் தேர்ந்தெடுத்தது ரிசர்வ் பேங்க்.

இந்த காந்திஜி முகப்படம் எப்படி கிடைத்தது ?

1946ல் இங்கிலாந்து லார்டு ப்ரெட்ரிக் லாரன்ஸ் என்பவர் தற்போதைய ராஷ்டிரபதி பவனில் காந்திஜியை சந்தித்துப் பேசியபோது எடுத்த பல படங்களில் இந்த படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த போட்டாவிலுள்ள முக அமைப்பு மட்டும்தான் ரூபாய்தாள்களில் அச்சிடப்படுகிறது.

No comments:

Post a Comment