Tuesday, 19 September 2023

லிங்கன்

ஆபிரகாம் லிங்கன் குடியரசுத் தலைவராக இருந்தபோது கோச் வண்டியில் சென்று கொண்டிருந்தார்.புதைகுழியில் பன்றி ஒன்று விழுந்து போராடிக் கொண்டிருந்தது. லிங்கன் வண்டியை நிறுத்தி பன்றி குட்டியை காப்பாற்றினார். 

அப்போது அவரது உடையில் சேரும் சகதியும் பட்டுவிட்டன. அப்படியே வெள்ளை மாளிகைக்கு சென்றார். அவரை அனைவரும் பாராட்டினார்கள். லிங்கன் குறுக்கிட்டு என்னை யாரும் புகழாதீர்கள். 

அந்த சின்னஞ்சிறிய உயிர் புதைக்குழியில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது என் இதயத்தில் ஒரு முள் தைத்தது போல் உணர்ந்தேன். அதன் உயிரை காப்பாற்றினேனோ இல்லையோ என் இதயத்தில் தைத்திருந்த
முள்ளை நான் அப்புறப்படுத்தி விட்டேன். அதை மட்டும் செய்யாதிருந்தால் என் இதயத்தில் தைத்த முள் என் வாழ்நாள் முழுவதும் ஆறாத காயத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார்

No comments:

Post a Comment