தன்னிடம் ரகசியங்கள் எதுவுமில்லை என்று திறந்து கிடக்கும் வெளியைப் பார்க்கும் போது மனம் வெகுவாகக் கனிந்து விடுகிறது. கட்டங்கரையில் அங்கங்கே முளைத்திருக்கும் சிறுபுற்கள், மேலே ஒன்றுமில்லாவிட்டாலும் தரை தனக்குள் ஏதேனும் ரகசியங்களை புதைத்து வைத்திருக்கிறதா என்று விசாரிக்க வேர்களைஅனுப்பி இருப்பதாக பாவனையில் இறுமாப்பாக அசைகின்றன.
என்னுடையது புல்மனமல்ல. மனித மனம். பரந்தவெளியைப் பார்க்கும் போது நானும் அதே அளவு விஸ்தாரம் அடைகிறேன்
-யுவன் சந்திரசேகர்
பற்றவன் என்பதை இரு கைகளை விரித்து காட்டுகிறான் சித்தன்... அருகம்புல்லுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பை வேர்கள் காட்டிக் கொடுத்து விடும் என்பதை அறியாத சித்தம்...
ReplyDeleteமனதிற்கும் கைகளுக்கும் தூரம் வெகு அதிகம்...