"நற்செள்ளை" எனும் சங்ககாலப் புலவர். சாதாரணமாக நாம் கண்டு, கவனிக்காமல் எளிதில் கடந்து செல்லும் பறவையான காக்கையைப் பற்றி தனது பாடலில் பாடியதால், அவருக்கு "காக்கைப் பாடினியார்" என்ற சிறப்புப் பட்டப்பெயர் வாய்த்தது.
சுற்றிலும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மைச் சுற்றி அதிசயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அவற்றை "சாதாரண செயல்" என நாம் கடந்து செல்கிறோம்.
எதிரில் ஒரு மரத்தைக் காண்கிறேன்.
அந்த மரத்தில் தினமும் வேரிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, 20 அடி உயரமுள்ள அந்த மரத்தின் உச்சிக்கிளைக்கும் தண்ணீர் கடத்தப்படுகிறது. இது மிகப் பெரிய அதிசயம் அல்லவா? பூ காயாவதும், காய் கனியாவதும் மகத்தான அதிசயம் தானே?
இயல்பான நிகழ்வுகளின் அதிசயத்தை வியக்க ஆரம்பித்தால் நமது மனம் நேர்மறை எண்ணங்களால் நிறையும், உற்சாகமாகும், நன்றி செலுத்தும் மனமும், அன்பு பரப்பும் குணமும் அதிகமாகும். வாழ்வு இனிதாகும்.
Every moment is a miracle... வாழ்வு இனிதாகட்டும். 🌸
No comments:
Post a Comment