Tuesday, 2 April 2024

குழம்பிய குட்டை?கூரையில் ஓட்டை?


எல்லாப் பிரச்சனைகளையும் ஒரேமாதிரி அணுகக்கூடாது என்கிறார் எழுத்தாளர் ஜேம்ஸ் கிளியர். இதை விளக்குவதற்கு அவர் பயன்படுத்தும் எடுத்துக்காட்டு: குழம்பிய குட்டை Vs கூரையில் ஓட்டை (Muddy Puddle Vs Leaky Ceiling).

குழம்பிய குட்டையை அப்படியே விட்டால் சிறிது நேரத்தில் தெளிவாகிவிடும். நான் அதைச் சரி செய்கிறேன் பேர்வழி என்று சேற்றில் குதித்துக் கலக்கினால் அது மேலும் குழம்பிவிடும்.

அதுபோல, சில பிரச்சனைகளைச் சும்மா விடவேண்டும், அவை தானாகச் சரியாகிவிடும்.

ஆனால், கூரையில் ஓட்டை விழுந்தால் அதை அப்படியே விடக்கூடாது. அப்படி விட்டால் அது மேலும் பெரிதாகி இன்னும் நீர் கசியும். சட்டென்று செயல்பட்டுச் சரிசெய்யவேண்டும்.

அதுபோல, சில பிரச்சனைகளைப் பார்த்தவுடன் களத்தில் இறங்கிச் செயல்படவேண்டும், தள்ளிப்போடக்கூடாது.

இப்போது உங்கள்முன் உள்ள பிரச்சனை குட்டையா, ஓட்டையா?

-என்.சொக்கன்

No comments:

Post a Comment