Reading_Marathon2025
#25RM055
Book No:13/100+
Pages:-224
கடலம்மா பேசுறேன் கண்ணு
-வறீதையா கான்ஸ்தந்தின்
பொதுவாக கடலைப் பற்றி சமவெளியில் இருப்போரிடம் கேட்டால்.. கடல் பெரிது.உப்பு சுவை, நீரோட்டம் இருக்கும். பெளர்ணமியில் அலை அதிகம் இருக்கும்.இன்னும் சிலவற்றை விரல்விட்டு எண்ணும் வகையில் தான் தகவல்கள் தெரியும். ஆனால் கடல் பற்றியும் கடலோடிகளின் வாழ்வு பற்றியுன் இந்நூல் அலசுகிறது.இந்து தமிழ் திசை உயிர்மூச்சு இணைப்பிதழில் தொடராய் வந்தது.
அவர்கள் கடலிற்கு முகத்தையும், சமவெளிக்கு முதுகையும் காட்டி நிற்கிறார்கள். மொழியைக் கையாண்டு சமவெளியை நோக்கி உரையாட வேண்டும் எனும் வார்த்தை ஜாலத்தில் நம்மோடு கைபிடித்து அழைத்திச் செல்கிறார்.
'கடலின் மகத்தான பங்களிப்புகளை, அதன் மீதான பழங்குடி மக்களின் நம்பிக்கையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய அறிவையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. சமவெளி மக்களுக்கு நெய்தல் நில வாழ்வியலை அறிமுகம் செய்கிறது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போல கடலின் முன் அனைவரும் சமமே. கடலாடி கடலுக்கு நுழையும் சாகசத்தை எழுத்தின் வடிவில் நமக்கு காட்சிப்படுத்துகிறார்.கடலோடி சமூகத்தில் பிள்ளைகள் தான் சொத்து. அதிக பிள்ளைகள் உள்ள குடும்பத்தை மரியாதையாக நடத்துகின்றனர்.
மீன் பிடிக்கச் செல்லும் போது தொலைவிலுள்ளோரை இயல்பாக கத்தி கூப்பிடுவர். நகரத்தில் கூட சந்தைகளில் இப்புழக்கம் உண்டு.பழங்குடி மக்களை அடையாளம் காணும் கூறுகளாக மைய அரசு பட்டியலிட்டிருக்கும் குணக்கூறுகளில் ஒன்று - பொது இடங்களில் அவர்கள் பெருங்குரலெடுத்துப் பேசுவார்கள் என்பது. காட்டிலும் கடலிலும் குரல்தான் மொழி எனும் தகவல் புதிதாக இருந்தது.
தரையில் கூட செல்வதற்கு கூகுள் மேப் லொகேசனை பயன்படுத்துகிறோம். ஆனால் கடலில் எவ்வாறு மீன்வர்கள் சரியாக அந்த இடத்திற்கு சென்று திரும்புகின்றனர்.ஜி .பி.எஸ் கருவிகளும், கடலோடிகளும் ஒரே அறிவியல் முறையைத் தான் பின்பற்றுகின்றனர் எவ்வாறு என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கியுள்ளார்.ஜி.பி எஸ் கருவிக்கு முன்னோடி மீனவர்களே என்பது இம்முறையால் நிரூபனமாகிறது.ஓநாய் வேட்டையாடும்.முறை குறித்து படித்திருப்போம். இதில் கலவா மீனை பிடிக்கும்.லாவகத்தை அலெக்ஸ் எனும் மீனவர் விளக்கியிருப்பது சிறப்பு.விரல் நுனியில் அம்மீனை எப்போது வேட்டையாட வேண்டுமென அறிந்து வைத்திருக்கிறார்.
கட்டுமர வரலாறு, அதனை எவ்வாறு தயாரிக்கின்றனர்,மீனவனின் அடையாளமாய் நெய்தல் நிலமக்கள் கருத்வது என்ன என்பதை விளக்கியுள்ளார்.கடலின் உவர்ப்பு உயிர்க்கோளத்தின் பெருவரம் என்று சொல்ல வேண்டும். சூரிய வெப்பத்தால் பெருங்கடல் பரப்பின் குறிப்பிட்ட பகுதி விரிவடைய நேரும்போது அடர்த்தி வேறுபாடு ஏற்படுகிறது. வெதுவெதுப்பான, அடர்த்தி குறைந்த கடல் நீர்த்திரளானது வெம்மை குறைந்த, அடர்த்தி குறைவான பகுதியை நோக்கி விரைகிறது. கடலின் உவர்தன்மையில் விளையும் இம்மாற்றம்தான் பெருங்கடல் நீரோட்டங்களின் அடிநாதம்.
. மீனவர்களின் வாழ்வியல்**: இந்த புத்தகம் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சமூக ரீதியான சவால்களை விரிவாகப் படம்பிடிக்கிறது.கடல் மற்றும் நெய்தல் நிலங்களின் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மீன்வளத்தின் மீதான தாக்கங்கள் மற்றும் இவற்றை எதிர்கொள்ளும் மீனவர்களின் போராட்டங்கள் பற்றியும் இந்த புத்தகம் விவரிக்கிறது.
*'பாட்டம் பொய்க்காதிருந்தால் வேட்டம் பொய்க்காது'. இது சங்கப்பாடல் உணர்த்தும் உண்மை. பருவமழை சரியாகப் பெய்தால் மீன்வேட்டம் சிறப்பாக அமையும். கடலோர வாழ்வின் எளிய உண்மை.
*நிலத்தைப் பொறுத்தவரை அதன் பரப்பில் மட்டும்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாகத் திகழ்கிறது கடல்.
*நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் (latent heat capacity) மிக அதிகம். வெப்ப மட்டங்கள் (thermal strata) இதனால்தான் உருவாகின்றன.
*ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பினால் நீர்த் திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல்போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்துவிடாமல் மேலே மிதப்பதற்கு இந்தப் பரப்பு இழுவிசைதான் (Surface tension) காரணம்.
*கடலில் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே வெளிச்சம் பாய்வதில்லை. பேராழங்களின் முக்கியமான பண்புகள் காரிருளும் பேரழுத்தமும்.
*உயிர்வளி, நீர்வளி, குளோரின் போன்ற 12 வாயுக்கள் உள்ளிட்ட 60 தனிமங்கள் கடல்நீரில் கரைந்துள்ளன. இவை தவிர கடல் நீரின் மூன்று பண்புகள் கடலுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன. முதலாவது, வேறெந்தக் கரைப்பானையும்விட அதிக எண்ணிக்கையிலான வேதிமங்களைக் கரைக்கும் திறன்கொண்டது நீர். இரண்டு, நீரின் வெப்பக் கொள்திறன் இயல்பிலேயே அதிகமானது. மூன்று, உறைநிலையில் விரிவடையும் அபூர்வமான திரவம் நீர்.
*கடல்நீர் நன்னீராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நீரோட்டங்கள் நிகழாது. உயிர்கள் பரவிப் பெருகாது. உயிர்ச்சத்து விநியோகம் நிகழாது.
*மீன்களைக் குறித்து படிப்புக்கு இக்தியாலஜி (Ichthyology) என்று பெயர். மீன் தொகை ஆய்வில் முக்கியமான வேலை மீனின் வயதைக் கணக்கிடுவது.
இப்புத்தகம் கடலில் வாழும் மீன்கள், பூச்சிகள் உள்ளிட்ட கடல்வாழ் சிற்றினங்கள் பற்றி பேசுகிறது. முதன் முதலில் கடல் பயணம் செய்த வரலாறு,பவளப்பாறைகள், நீரோட்டங்கள் பற்றி விரிவாக கூறுகிறது.நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். கடலுக்குள் செல்லும் கடலோடி அன்றாடம் மரணத்தின் வாயிலை எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான். நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் மீனவனுக்கு மனைவியோ தாயோ வெற்றிலை, வாய்க்கரிசி கொடுத்து வழியனுப்புகிறாள். அதுவே அவனது இறுதிப் பயணமாக அமைந்துவிடலாம் எனும் வரி கலஙக வைக்கிறது.
பத்தி பத்தியாக தகவல்கள் ஒவ்வொரு பக்கமும் கடல் குறித்து அறியாத தகவல்கள் ஏராளம். கடல் பற்றி அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு