#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055
புத்தகம்-6
பக்கங்கள் -512
நாள்:3
குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை-3
திருக்குறள்
திருக்குறள் புத்தகங்கள் பலவும் தமிழ் மொழியில் வந்துள்ளன. ஆனால் நான் படித்தவற்றில் மிகச்சிறந்த உரையாசிரியராக உரைநூலாக இந்த புத்தகம் அமைந்துள்ளது. வள்ளுவத்துக்கு அடிகளார் தரும் புதிய பார்வைகள் பளிச்சிடுகின்றன. பகுத்தறிவு கருத்துக்கள் மூடநம்பிக்கைகளை தகர்த்தெறியும் வார்த்தைகள் அறிவியல் செய்திகள் மேலைநாட்டு தத்துவங்கள் என ஒவ்வொரு திருக்குறளுக்கும் அவர் காட்டும் மேற்கோள்களும் அவர் சொல்லும் வாழ்வியல் உண்மைகளும் நம்மை அடுத்தடுத்த பக்கத்தை நோக்கி வேகமாய் அதே சமயத்தில் சொன்ன கருத்துக்களை அசைபோடும் விதத்திலும் அமைந்துள்ளது.
அடிகளாரைப் பற்றி முதன் மதலில் கேள்விப்பட்டது அவர் மார்க்சியம் பயின்றவர் என்பது தான்.ஒரு முனிவர் மார்க்சியம் பயில்வாரா என்பதுதான் ஆச்சரியம். ஆனால் நூலை படிக்க படிக்க அவர் தரும் தெளவான சிந்தனைகள் ஆன்மீக சிந்தனைகள் என பலதரப்பட்ட விசாலமான பார்வை அவரிடம் உண்டு.
இந்த நூலில் வாழ்க்கை நலம் ,மண்ணும் விண்ணும், முத்து மொழிகள், திருவள்ளுவர் காட்டும் அரசியல், சிந்தனை மலர்கள், தமிழமுது, இறுதியாக அடிகளார் மடல் என ஏழு பகுதிகளாக விரிந்துள்ளது. ஒவ்வொரு பகுதியில் உள்ள கட்டுரைகளும் ஒரு வாழ்வியல் சிந்தனைகளோடு ஒரு திருக்குறளையும் முன்வைத்து அடிகளார் அவர்களின் சொற்பொழிவாக அந்த கட்டுரை சிறப்பாக அமைந்துள்ளது.
நீரின்றி அமையாது உலகு என்ற குரளுக்கு பொருள் மட்டும் சொல்லி இருந்தால் போதும். ஆனால் தண்ணீரின் இன்றியமையாமையை உணர்த்துவதற்காக வான்மழை பெறுவதற்கு நீர்நிலைகளை பேண வேண்டிய அவசியத்தை குறிக்கிறார்."அவித்தல் என்றால் அழித்தல் அடக்குதல் என்று பொருள் கொள்ளுதல் முறை என்று அவித்தல் பக்குவப்படுத்துதல் உண்ண முடியாத கிழங்கு முதலியவற்றை அவிப்பது போல, பொறிகள் தற்சார்பாக இயங்காமல் ஊர்உலகு என்று பொதுமையில் இயங்கினால் தூய்மையுறும் பக்குவம் அடையும் என்று கூறுகிறார்.
பொறாமையை திருக்குறள் அழுக்காறு என்கிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம்.அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீயது என்கிறார்.
"O Beware My Lord of Jealousy" . "அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது" என்பார் காட்டன். 'Envy will sting itself to death' என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை; முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால், தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.
தமிழ் நாட்டில் ஒரு பழமொழி உண்டு. "தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்" என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.
நற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் 'பாவி' என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.
இதுபோல் ஒரு சாதாரண சொல்லுக்கு மேற்கோள் செல்லும் உதாரணங்களே இந்த குறட்பாவை நம் மனதில் எளிமையாய் பதிய வைக்கிறது.
A in the sweet of the fere shalt than cat Bread" அனுபவ வார்த்தை அறிக. உழைப்பில் சிந்தும் வியர்வையே உண்ணும் ரொட்டிக்கு விலை. உழைத்து உண்பதே ஒழுக்கம்; நீதி சார்ந்த வாழ்வியல். சுவையுடைய உணவு வேண்டாம்! உணவுக்குச் சுவையிருப்பினும் வாழ்க்கைக்குப் பயன்படாது. தண்ணீர்போல் அமைந்த கூழாயினும் உழைப்பால் வந்ததாயின் அந்தக் கூழே இனியது. ஆதலால் சிலவாம் இனாம் வேண்டாம்.
"Nothing is free" என்ற வாழ்க்கையை நியதியாக்கு வோம். உழைப்பு - படைப்பாற்றல் தன்மை வாய்ந்தது. உழைப்பு, உழைப்பு! - நேர்மையான உழைப்பு ஒன்றுதான் மனித சமுதாயத்திற்குச் சிறப்பான மருந்து.
தெண்ணீர் அடுபுற்கை யாயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினியது இல்.
இப்படி குறளுக்கு ஆழ்ந்த விளக்கத்தையும் மேலைநாட்டு சிந்தனையில் மேற்கோள் காட்டும் போது அந்த புத்தகம் எவ்வளவு உயர்வானது என்பது எண்ணிப் பாருங்கள்.
மார்க்சீயம், சொற்களுக்குக் காணும்பொருளே வேறு. மார்க்சீய அகராதியில் 'பொருள்' என்றால் தங்கம் - நாணயம் ஆகியவற்றை ஒரு பொழுதும் குறிக்காது. மனிதக் குலத்திற்குப் பயன்படும் தகுதி குறித்தே பொருளுக்கு மதிப்பு என்பது மார்க்சீயத்தின் சித்தாந்தம். திருக்குறளும் 'பொருள்' என்ற சொல்லுக்கும் பொருளாகக் காட்டியது; மனிதகுலம் துய்த்து மகிழ்ந்து அனுபவித்து வாழக்கூடிய, வாழவைக்கக் கூடிய பொருள்களையே. "பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லை" என்ற திருக்குறளுக்கு இதுவே கருத்து. உடல்-உயிர்ப் பிணைப்பில் நடமாடும் மனித உலகம் நெடிதுநாள் வளர வாழ உண்பனவும், தின்பனவும் ஆகிய துய்ப்புப் பொருள்கள் தேவை. அத்தகைய பொருள்களே பொருள்கள் என்பது வள்ளுவத்தின் செழுமையான கருத்து.
உழைப்பாற்றலே மனிதனுக்குரிய ஒரே உடமையாக இருக்க வேண்டும், என்பது மார்க்சீயம். "உழைக்காதவனுக்கு உண்ண உரிமை இல்லை" என்றே மார்க்சீயம் ஐயத்திற்கு இடமின்றித் தெரிவிக்கிறது. நமது திருக்குறளும்.
இறுதிப் பகுதியான ஏழாவது பகுதியில் அதிகார வரவுகள் தமிழ்ச்செல்வனுக்கு என்ற கடிதம் எழுதுகிறார். நேரு மகளுக்கு கடிதம் எழுதியது போல தமிழ் மக்களுக்கு திருக்குறளின் கருத்துக்களை கடிதம் மூலம் நமக்கு எடுத்து இயம்புகிறார்.
ஒரு கடிதம் அறிவின் அழகு என்ற தலைப்பில் இப்படி துவங்குகிறது..
வாழ்க்கைக்குப் பயன்படும் அறிவு இரு வகையினது. ஒன்று ஆனது அறிதல்; பிறிதொன்று ஆவது அறிதல். ஆனது அறிவதைப் பட்டறிவு என்பர். அதாவது இந்த நொடிக்கு முன்புவரை நம்முடைய வாழ்க்கையானாலும் சரி சமுதாய அமைப்பானாலும் சரி நடந்தனவற்றை அறிதல். இங்கு அறிதலாவது அவற்றின் நடைமுறைகளையன்று. சென்றகால நிகழ்வுகளின் விளைவுகளை அறிதல் அல்லது எதிர்விளைவு களை அறிதல்.
இதன் தொடர்ச்சியாக அறிவைக் குறித்து தான் அறிந்த தகவல்களையும் குறளையும் சொல்லி நல்வழிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இவை யாவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வகையில் தான். ஆற்று நீரில் ஒரு சிறு அளவைத்தான் இதில் பதிவு செய்ய முடிந்தது. இந்த ஊற்று நீரை பருகப் பருக மேலும் அறிவின்பம் பெறலாம் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment