Thursday, 27 March 2025

புத்தகம் 30


#30நாள்வாசிப்புப்போட்டி
#25RM055

புத்தகம்-7
பக்கங்கள் -136
நாள்-3

அப்புறம் என்பது எப்போதும் இல்லை
-பிருந்தா சேது

பிருந்தா சேது அவர்கள் எழுதிய புத்தகம் பெண்ணியம் குறித்த பதிவுகளை எளிமையாகவும் அதே நேரத்தில் அன்றாட நிகழ்வில் ஒரு பெண் எவ்வாறு செயல்படுகிறார், சமூகத்தில் அழுத்தம் அவள் மீது எவ்வாறெல்லாம் விழுகிறது என்பதனை இந்த புத்தகத்தில் சொல்லி இருப்பார்.இந்நாட்டின் தலித்தை விடவும் கீழான நிலை என்றால் அது பெண்கள்தான். ஏதோ சில பெண்ணிய ஆண்கள் சமத்துவமாக இருப்பதால் மொத்தமும் மாறிவிட்டதாக அர்த்தம் இல்லை என்று பொதுமைப்படுத்துதலில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்.

வீட்டு வேலையிலும் கூட தியானத்தை கடைப்பிடிக்கலாம். ஏனெனில் சில செயல்களை நாம் ஈடுபாடின்றி செய்யும்போது அதனை மீண்டும் செய்யும்படி ஆகிவிடுகிறது. மனதார இந்த கணத்தில் செய்யும் செயலில் மட்டும் மனதை வைத்து செய்வது கூட தியானம் போன்றது தான். ஏனெனில் மறு பார்வையில் தான் செய்யும்போது விட்டுப் போன எல்லாமே பிடிபடும் அந்த வேலையில் இருந்து மன பதற்றம் விலகி வெறும் பார்வையாளராய் பார்க்க தொடங்குவோம் என்று கூறி பல்வேறு உதாரணங்களை அடுக்குகிறார்.

இன்றைய ஒரு நாளை நீங்கள் தீர்மானியங்கள்; பிறகு ஒவ்வொரு நாளாக அன்றைய தினத்தை மட்டும் தீர்மானியங்கள் என்ற வரி மிகவும் பிடித்தமாக இருந்தது. கொரோனா காலத்தில் பெண்கள் எவ்வாறெல்லாம் அவதிப்பட்டனர் என்பதைச் சொல்லி அது சார்ந்த பதிவுகளை தந்திருப்பார். ஓடிக்கொண்டே இருப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஓய்வு முக்கியம் என்பதனை வலியுறுத்தி இருப்பார்.

தங்கள் கஷ்டங்களை சொல்லும் போது மிகப்பெரிய தத்துவத்தையும் எளிதில் போகிற போக்கில் சொல்வார்கள் .அது போல இந்த கட்டுரையில் கடவுள் என்னும் இடத்தில் உண்மையில் நன்மை தீமை என்பதெல்லாம் நாமாக ஏற்றுக் கொண்ட பெயர்கள் .விரும்பியது நடந்தால் நன்மை. விரும்பாதது நடந்தால் தீமை என்கிறார். இப்போது என்கிற சலனமான சிறிய கணத்தில், மிகப்பெரிய ஒன்றை ஒருக்காலும் அளவிட்டு விட முடியாது. ஏனெனில் மனிதர்கள் மாறிக் கொண்டிருக்கிறார்கள். இன்று சரி என தோன்றுவது நாளை தவறாக இருக்கக்கூடும். தவறு என்பது நாளை சரியாக இருக்கக்கூடும். நிலைத்த தன்மைய எப்போதும் கொண்டிருப்பதில்லை. எல்லாமே அந்தந்த நேரத்தில் உண்மைகள் என்ற உளவியல் பூர்வ பார்வையும்
 இதில் காட்டி இருப்பார்.

பயத்தைப் பற்றி சொல்லும்போது பயத்தின் அவநம்பிக்கையின் காரணமாக எல்லாரையும் சந்தேகிப்பது. ஒரு நாளில் மனதில் 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட எண்ணங்கள் தோன்றுகின்றன. அத்தனை எண்ணங்களின் பின்னாலும் ஓடி களைத்து உற்சாகமாகி பதறி செத்து உயர்த்து வீழ்ந்து பலூனாக காற்றின் உயரத்தில் பறந்து வெடித்து இப்படி அடுக்கிக் கொண்டே செல்வது களைத்துப் போவதற்கு முக்கிய காரணம் .மனதும் உடலும் எண்ணங்களுக்கு எதிர்வினை புரிந்து புரிந்து அதுதான் நோய்களாக பரிணமிக்கின்றன. எண்ணங்களுடன் நட்பு கொள்ளும்போது அதனால் எந்த வித தீமையும் ஏற்படுவதில்லை என்ற தத்துவத்தையும் இதில் சொல்லி இருக்கிறார்.

ஆனாலும் எதார்த்தத்தில் என்னதான் அறிவின் துணை கொண்டு அனுபவங்களின துணை கொண்டு முதிர்ச்சியாக சிந்திப்பவன் ஆக இருந்தாலும் மனதில் தேய்த்த முள்ளாக ரத்தமும் செயலும் வர நம் நிதானத்தை சீர்குலைப்பானாக சில இருக்கும் 

*அன்பைச் சொல்ல விரும்புவர்கள் அவ்வப்போது சொல்லி விடுங்கள். தேவைப்படும்போது கிடைக்காதது. தேவையில்லாத போது எவ்வளவு கிடைத்தாலும் வீண் தான். அதற்கு உரிய மரியாதை இருக்காது.

இளம் வயதில் தான் வாசித்து அனுபவங்களையும் பள்ளி வைத்து நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார் இன்று பணியாற்றும் இடங்களில் ஒரு பெண் சந்திக்கும் சவால்களையும் அதனை எவ்வாறெல்லாம் எதிர்கொள்வது என்பதை பற்றி கூறியதோடு ஆங்காங்கே வரும் தத்துவ வரிகள் நமக்கு இந்த புத்தகத்தை மேலும் வாசிக்க தூண்டுகின்றன. வென்றதை விட தோற்றத்தைச் சொல்ல அதிகமான துணிவு வேண்டும். அடித்ததை விட அரை வாங்கியதைச் சொல்ல மன உறுதி வேண்டும். சில தவறுகள் ஈடுகட்டப்படுவதில்லை. அவற்றை அப்படியே கடந்து வர வேண்டி இருக்கிறது ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது எனும் வரிகள் உண்மையில் மனதை தொட்ட வரிகளாகும்.

பெண்ணியம் குறித்த நூல்கள் பொதுவாக பிறரை வசை பாடுவதாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தில் ரன்னை பற்றிய சுயமதிப்பீடாகவும் தான் சந்தித்த சவால்களை பற்றியும் சமூகத்தில் பெண்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை பற்றியும் ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment