Tuesday, 13 May 2025

தஸ்தா


தஸ்தயேவ்ஸ்கியின் ஒரு கதை இருக்கிறது .ஒரு கிராமத்தில் இளைஞன் ஒருவன் தன்னந்தனியாக வாழ்ந்து வருகிறான்.சுற்றியிருக்கும் மக்களுக்கு அவனை பிடிக்கவே பிடிக்காது .அவர்களை பொறுத்தவரையில் அவன் ஆபத்தானவன்,கெட்டவன்,மோசமானவன் ..

ஒரு நாள் காட்டுப்பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகத்தால் மயக்கம் அடையும் நிலையில் "தண்ணி தண்ணி " என்று கத்திக் கொண்டு கீழே விழுந்து கிடக்கிறாள்.அப்போது அந்த வழியாக இளைஞன் வருகிறான் .அவனைப் பார்க்கும் அந்தப் பெண் இந்த நேரத்தில் இவனா வரணும் என்று நொந்து கொள்கிறாள் .அவன் அந்தப் பெண்ணைக் கடந்து செல்கிறான் .சிறிது நேரத்தில் தண்ணீருடன் வருகிறான் ,அந்தப் பெண்ணுக்கு அருகில் தண்ணீரை வைத்து விட்டு அவன் போக்கில் சென்று விடுகிறான்.

ஒருவன் எந்த நேரத்திலும் எப்போது வேண்டுமானாலும் நல்லவனாக மாறலாம் ,அது மட்டுமில்லாமல் ஒருவனை மதிப்பிடுவது ,ஒருவனை பற்றி முடிவு செய்வது எவ்வளவு அபத்தமானது என்பதை உணர்த்தும் கதை .

 மற்றவர்களைப் பற்றிய நம் தவறான எண்ணங்களை ,மதிப்பிடுதலை நாம் உணர்கின்ற வகையில்  அழகாக சித்தரிக்கிறது

-இனிய காலை

No comments:

Post a Comment