Friday, 16 May 2025

ஈரோடு கதிர்


சாதாரணமாக ஒரு உரையாடலைத் தொடங்குவது மிகவும் எளிது. ’நல்லாருக்கீங்ளா, சாப்பிட்டாச்சா, வெயில் ரொம்ப’ என ஏதேனும் மிகச் சம்பிரதாயமான முறையில் உரையாடலைத் தொடங்கிவிட முடியும். ஆனால் அதனைத் தொடர்வதில்தான் பலருக்கும் சிக்கல் இருக்கின்றது.

*உரையாடலைத் தொடர்வதற்கு, நம் சொற்களஞ்சியத்தில் உயிரோட்டமுள்ள, மனப்பூர்வமான சொற்கள் இருக்க வேண்டும்* . நாம் யாருடன் உரையாடுகிறோமோ, அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும், மலரச் செய்யும் திறன் அந்த சொற்களுக்கு இருக்க வேண்டும். சம்பிரதாயமான சொற்களில் அந்த உயிர்ப்பு ஒருபோதும் இருப்பதில்லை.

அவர்கள் மீது அக்கறை, அன்பு, மதிப்பு, ப்ரியம், மரியாதை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றைச் செலுத்தும் வகையிலான சொற்கள் நம்மிடம் இருக்க வேண்டும். 
அப்படிப்பட்ட உணர்வுகளை அவர்கள் உணரும்போது, உரையாடல் தானாகவே வளரத் தொடங்கும், ஆழமானதாகவும் இனிமையானதாகவும் மாறும்.

உண்மையில், *ஒவ்வொரு உரையாடலின் முடிவிலும் நம்மை நாமே புதுப்பித்துக்கொள்கிறோம்* .

~ ஈரோடு கதிர்

No comments:

Post a Comment