#கற்கை_நன்றே_106
“நீங்கள் விரும்பாத எதையாவது சந்திக்கும்போது, அதை மாற்றுவதுதான் நீங்கள் செய்ய வேண்டியது. அதை மாற்ற முடியாவிட்டால், அதைப் பற்றிய உங்கள் சிந்தனையையே மாற்றுங்கள்.
— மாயா ஆஞ்சலோ
மாற்றங்களை புரிந்து கொண்டு, அதை எதிர்கொள்ளும் மனநிலையை ஏற்படுத்திக் கொண்டால்,மாற்றத்தை எதிரியாக நினைக்காமல் நண்பனாக பார்க்க முடியும்.நாமோ மாற்றங்களை விதிவிலக்காகவே பார்க்கிறோம். ஆனால் உண்மையில், அவைதான் வாழ்க்கையின் மையம்.
Brad stulberg எழுதிய Master of change எனும் புத்தகத்தில்
non-dual thinking பற்றி சொல்கிறார்..
வாழ்க்கையில் சில விஷயங்கள் மட்டும் "இது அல்லது அது" என இருக்கும். ஆனால் பல விஷயங்கள் "இது மற்றும் அது" என்பதாக இருக்கும். இதைத்தான் தத்துவத்தில் non-dual thinking என்பார்கள்.
உதாரணமாக:
முடிவெடுப்பு என்பது “அறிவோ அல்லது உணர்வோ” அல்ல; அது “அறிவும் உணர்வும்” ஆகும்.
மன உறுதி என்பது “கட்டுப்பாடோ அல்லது கருணையோ” அல்ல; அது இரண்டும் சேர்ந்ததுதான்.
கடின உழைப்பும் ஓய்வும் இரண்டும் ஒன்றாகவே தேவை என உணர முடியும்.
Rugged Flexibility" (வலிமையான நெகிழ்ச்சி) என்ற மனநிலையை உருவாக்குவதற்கான அறிவியல், ஞானம் மற்றும் நடைமுறைகளைக் கூறுகிறது.
இந்த சிந்தனையில் நாம் உணர்வது: வாழ்க்கை மிக சிக்கலானது, உண்மை பெரும்பாலும் முரண்பாடுகளில் மறைந்திருக்கும்.
இவ்வாறு எண்ணும் போது, Rugged Flexibility தோன்றுகிறது:
Rugged என்பது உறுதியும் சகிப்புத் தன்மையும்
Flexible என்பது மாறுபாடுகளுக்கு உடனே ஒத்துழைக்கும் தன்மை
இரண்டும் சேர்ந்தால், மாற்றங்களில் கூட திகழும் தன்மை பெறலாம்.
ஞானம் என்ன?
அது ஒரு விஷயத்தை அறிந்து, எப்போது அதை பயன்படுத்த வேண்டும் என்பதை அறிவது.
Daniel Kahneman சொல்வதுபோல்
“யாராவது எதையாவது சொன்னால், அது உண்மையா என்றே கேட்காதீர்கள். அது எதற்கேற்ப உண்மை என்பதை கேளுங்கள்.”
ஒருவர் வேலை செய்யும் முறை மற்றவருக்கு பொருந்தாமல் இருக்கலாம்.
சுய உணர்வு மற்றும் சோதனைகள் மூலம் தான் உங்களுக்கு ஏற்புடையதான ஒரு நடைமுறையை உருவாக்க வேண்டும்.
நாம் அனைவரும் மாற்றங்களை எதிர்பாராமல், தவிர்க்க முயல்கிறோம். ஆனால் உண்மையான வளர்ச்சி அந்த மாற்றங்களை கட்டுப்படுத்துவது நம்மால் மட்டுமே சாத்தியம். மாற்றத்தை எதிர்க்காதீர்கள்.
மாறுவது எல்லாம் உயிரோடு
மாறாதது எல்லாம் மண்ணோடு"
தேவையான சூழ்நிலையில் தேவையான மாற்றங்களை ஏற்றுக் கொள்வதும் ,கடைபிடிப்பதும் ஆரோக்கியமான செயலாக எடுத்து கொண்டு நம் வழி நடப்பது நல்லது
நடக்கும்போது ஒரு கால் முன்னாலும், மற்றொரு கால் பின்னாலும் இருக்கும்…
ஆனால், அதற்காக முன்னால் இருக்கும் கால் கர்வப்படவும் இல்லை… பின்னால் இருக்கும் கால் அவமானப்படவும் இல்லை…அவைகளுக்குத் தெரியும் நொடியில் நிலைமை மாறும் என்று…அதனால் தான் மாற்றம் ஒன்றே மாறாதது.
ஒரு சிறிய பறவை தினமும் ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்து சத்தமாகப் பாட்டுப் பாடும். ஒரு நாள், அந்த மரம் வெட்டப்பட்டது. பறவையை ஒரு பெரிய மாற்றம் எதிர்நோக்கியது. ஆனால் அது பயந்து விலகாமல், ஒரு புதிய மரத்தைத் தேடி, அங்கேயும் பாட ஆரம்பித்தது.
மாறுதல் என்பது முடிவு அல்ல — அது ஒரு புதிய தொடக்கம்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment