#கற்கை_நன்றே_187
"அறிந்து கொள்ளல் என்பது இரண்டு வகை.
ஒன்று, புரிந்துகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளுதல், மற்றொன்று உணர்ந்து கொள்வதின் மூலம் அறிந்து கொள்ளுதல்
டென்ஷன் என்பது சத்தத்தைப் போல! சத்தத்தை உண்டு பண்ணத்தான் இரண்டு கைகளையும் நீங்கள் தட்ட வேண்டும். 'டென்ஷன் இல்லாமல் இருப்பது' என்பது அமைதியைப் போல! நிசப்தத்தை உங்களால் உண்டு பண்ண முடியாது! ஏனென்றால், அது ஏற்கனவே இருக்கிறது என படித்திருக்கிறேன்.
தாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்களோ, அவர்கள் அந்த அளவுக்குத்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என்று ஆபிரகாம் லிங்கன் கூறியுள்ளார். தம் வாழ்வில் நிகழும் விஷயங்கள நம் மகிழ்ச்சியைத் தீர்மானிப்பதில்லை மாறாக, அந்நிகழ்வுகள் குறித்து நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் நம் மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது.
ஒரு முறை சீன இளைஞன் ஒருவன் ஹோட்டலில் புரூஸ் லீஐ வம்புக்கு இழுத்துக்கொண்டே இருந்தான், லீ அமைதியாகவே இருந்தார் “ஏன் இப்படி ?” என்று கேட்ட பொழுது ,”நான் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். அதை மற்றவர்கள் திருட விடமாட்டேன் !” என்று மட்டும் சொன்னார்.
வீரம் என்பது சண்டை போடுவதில் மட்டுமில்லை ; யாருடன் சண்டை போடாமல் இருக்க வேண்டும் என உணர்ந்து நடப்பதிலும் இருக்கிறது.
நிறைய ஜென் கதைகள் சொல்லும் லீக்கு மிகவும் பிடித்த கதை ஒன்று உண்டு. கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லி வந்த இளைஞனிடம் நிரம்பிய தேநீர் கோப்பையை மீண்டும் ஊற்றி நிறைக்க முயல்கிற செயலை செய்து “வெறுமையாக இருக்கிற பொழுது தான், அறிதலைக்கடந்து உணர்தலை நோக்கி நகர்கிற பொழுது தான் நீ ஜென் ஆகிறாய் !” என்கிற ஆழ்ந்த தத்துவம் இருப்பதை உணர்த்திய அந்தக்கதை மிகவும் பிடிக்கும் என்கிறார் .மனம் விரும்புவதை உடல் செய்ய இந்த அறிதல் முக்கியம்.
நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு என்கிறார் ஜெயமோகன்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment