TNPTF MANI💥: சிக்கல் விழுந்த நூல்கண்டை சரி செய்யப் பாருங்கள். பறக்க வேண்டிய பட்டத்தின் நீளம் அதில் இருக்கிறது!
- ராஜா சந்திரசேகர்
# நட்பு மொழி
அறிவுமதி
* உனக்கு ஆண் நண்பரே
இல்லையாம்மா
என்றேன்
தாவணி
தடுத்துவிட்டது மகளே
என்றாள்
அம்மா
* இருவரும் என்ன காதலர்களா
என்று கேட்கிற உலகில்தான்
நண்பர்களாக
இருக்கிறோம்
* திருமணத்திற்கு முன்பு சரி
இனி வேண்டாம்
என்று சொல்கிற
ஆணோ பெண்ணோ
கொலை செய்கிறார்கள்
மூன்று
மனசுகளை
* நண்பர்களைக்
குழந்தைகளாகப்
பார்க்கத்
தெரியாதவர்களின்
குழந்தைகள்
பாவப்பட்டவர்கள்
* அய்ந்தாறு ஆண்களோடு
பேசிப் போகிற
பெண்ணைப் பார்க்க
கழுவிய
கண்கள்
வேண்டும்
* காமத்திற்கு
அறை
நட்புக்கு
வானம்
# மவுனத்தின்
பொருள் ஆவதற்குச்
சொற்களை விட்டு
வெளியே வந்தால் போதுமா?
மவுனத்தை விட்டு
வெளியே வர வேண்டாமா?
-தமிழன்பன்
# எந்த புகைப்படமும் அதை எடுத்த நாளில் திருப்தி தருவதில்லை.,
அது அழகாக மாற அந்த மனிதனுக்கு வயது கூட வேண்டியிருக்கிறது
-அசோகமித்ரன்
# ஆணி புடுங்குவது, ஆணியே புடுங்க வேண்டாம்” என்னும் தொடர்கள் வடிவேலிடமிருந்து புகழ்பெற்றதாகத்தானே நினைத்துகொண்டிருக்கிறோம் ?
அதற்கும் முன்பாகவே ஒருவர் ஆணி பிடுங்கியிருக்கிறார். அவர்தான் உவமைக் கவிஞர் சுரதா. அவர் ஆணி பிடுங்கிய கதை அப்போதைய இலக்கியப் பரப்பில் நகைச்சுவையாய் உலவிக்கொண்டிருந்தது. நேர்காணல் ஒன்றில் அவர் கூறியது.
“நீங்கள் ஏன் சுரதா என்று பெயர் வைத்துக்கொண்டீர்கள் ?”
“பாரதிதாசனிடத்திலே எனக்கு ஈடுபாடு உண்டு. அதனாலே சுப்புரத்தினதாசன்னு வச்சிக்கிட்டேன். ஒரு சமயம் லெட்டர் எழுதறப்போ கையெழுத்து போட இடமில்லே. சு.ர.தா. என்று சுருக்கமாக இடையிலே புள்ளி வைத்து எழுதினேன். பிறகு யோசித்துவிட்டு, இடையிலே இந்த ஆணிகள் எதுக்காகன்னுட்டுப் புடுங்கிட்டேன்.”
இதுதான் சுரதா ஆணி பிடுங்கிய கதை.
நன்றி:மகுடேசுவரன்
No comments:
Post a Comment