Thursday, 18 June 2020

யுகபாரதி

அம்மாவின்கை
ஊருக்குப் போய் திரும்பிய அம்மா
குழந்தைகளின் முகத்தைப் பார்க்கிறாள்

குழந்தைகள் கையைப் பார்க்கின்றன
தூக்கி  வளர்த்த கையை
சோறூட்டிய கையை
தலை வாரிவிட்ட கையை

தாலாட்டுக்கேற்பத் தட்டிய கையை
தகப்பன் அடிக்க வர
தடுக்க வந்த கையை
அம்மாவின்கை அப்படியே தானிருக்கிறது

குழந்தைகளின் கண்கள் தான்
மாறிவிடுகின்றன சமயத்திற்கேற்ப

#யுகபாரதி

No comments:

Post a Comment