Friday, 21 August 2020

கல்யாண்ஜி

எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு

-கல்யாண்ஜி

No comments:

Post a Comment