தந்தி ஏன் கண்டுபிடிக்கப்பட்டது?தந்தியைக் கண்டுபிடித்த சாமுவேல் மோர்ஸ் ஒரு ஓவியர். தன் குடும்பத்தை விட்டு தூரத்தில் இருந்த போது இவர் மனைவி திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்த செய்தி இவருக்குக் கிடைத்த போது அவரது மனைவியை புதைத்துவிட்டு இருந்தார்கள். இதனால் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளான சாமுவேல் மோர்ஸ் ஓவியத்தில் தான் செலுத்திய கவனத்தை துரிதமான தகவல் பரிவர்த்தனை குறித்து செலுத்தி உழைக்கத்தொடங்கினார். இதன் விளைவாகத்தான் அவர் தந்தியைக் கண்டுபிடித்தார். தனக்கு வந்த துன்பம் பிறருக்கு வரக்கூடாது என்று நினைக்கும் உன்னதமான மனிதர்களால் தான் உலகம் வாழ்ந்து வருகிறது.
-இந்திரன்
No comments:
Post a Comment