#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-4
Book-9
Pages-800
வேள்பாரி பாகம் 2
-சுவெங்கடேசன்
மூவேந்தர்களும் பாரி மீது படையெடுக்க முடிவு செய்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பது பாரி மீதான தாக்குதல் உணர்த்தியது. முன்னேறிச் செல்லும் படைகள் அனைத்தையும் மலையிலிருந்து வெளிப்படும் வீரர்களின் அம்பும் ஈட்டியும் அது நிச்சயம் முடியாது என்பதை உணர்த்தியது. ஆதலால் மூவேந்தர்களும் இணைந்து பாரியின் மீது போர் தொடுப்பது என முடிவு எடுத்தனர். போருக்கான பாரியின் தூதுவராக கபிலர் செயல்பட்டார் .
போருக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டன. போருக்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அடுத்து வரும் 500 பக்கங்களும் போர்க்களத்தில் நின்று படிக்கிறோமா அல்லது வீட்டில் இருந்து படிக்கிறோமா என்ற உணர்வை தரும் அளவுக்கு சுவாரசியம். வேகம் வேகம் போர்க்களங்களின் அத்தனை நுணுக்கங்களையும் பறம்பு வீரர்கள் அறிந்திருந்து ஆட்கள் குறைவாக இருந்தாலும் ஆட்கள் அதிகம் இருக்கும் மூவேந்தர்களின் படைகளையும் சிதற செய்வதை ஒவ்வொரு காட்சிகளிலும் வெளிப்பட்டது.
காற்றின் திசையில் அம்பெய்வது பூச்சிகளை ஏவி விடுவது, காட்டெருமைகளை இறக்கி விடுவது, சிற்றியோர்களுக்கு துன்பம் வரும் என்பதால் போர்க்களத்தில் யானைகளை பயன்படுத்தாது இருப்பது, அட்டைப் பூச்சிகளை பரப்புவது, கடும் வெயிலில் எதிரிகளை நிலை தடுமாற வைப்பது என ஒவ்வொரு அத்தியாயத்திலும் போரின் உத்திகள் இருந்தன. அனுபவமே சிறந்த ஆசான் என்பார்கள் இவர்கள் போர் அனுபவம் இல்லை என்றாலும் காட்டின் அனுபவத்தின் மூலம் நன்கு வெளிப்படுத்தியிருப்பார்கள்
சமவெளி மனிதர்கள் பயன்படுத்தும் வில்லின் ஆற்றலை விட மலை மக்கள் பயன்படுத்தும் ஆற்றல் மிக வலிமையானது. போர் தொடங்குவதற்கான முந்தைய நாளில் நீலன் என்பவரை கவர்ந்து சென்று விடுகிறார்கள் படையினர். அந்த நீலனை மீட்கும் போராட்டமே இந்த போர்க்களமாய் மாறி விடுகிறது. சிறப்பு செடிகளை துடைத்து அம்பை எய்தவுடன் குதிரைகள் கீழே விழுவதும் வீரர்களின் உடம்பில் பட்டும் தெறிக்கவில்லை சதையோடு பிய்ந்து வருவதும் எதிரிகளை நிலைகுலைய செய்கிறது. இறுதியில் நீலன் மீட்கப்பட்டானா? மூவேந்தர்களின் படை என்ன ஆனது? பாரியன் மதியூகமும், குறைவான ஆட்கள் உள்ள பறம்பு படையும் என்ன ஆனது? என்பதை புத்தகம் சுவாரசியமாய் விவரிக்கிறது
தேக்கனின் வீரமும் மற்றுமுள்ள வீரர்களின் வீரமும் இறுதியில் பாரியன் போர்க்களையும் புத்தகத்தின் பெருமைகளை பேசும். ஒவ்வொரு பத்தியிலும் வாழ்வினை பற்றியும் தத்துவத்தை பற்றியும் போர்க்களைகளை பற்றியும் எதிரிகளின் அசைவினை பற்றியும் மதியுகத்தால் வெல்ல வேண்டும் நிலையும் ..காட்டினை எக்காரணம் கொண்டும் அந்நியர்களை பிரவேசிக்க கூடாது, அது நம் சொத்து என எண்ண வைக்கும் பழங்குடி மக்களின் இனப் போராட்டமும் நம்மை வியக்க வைக்கிறது .இறுதியில் சுகமாக முடிந்த கொற்றவை திருவிழாவோடு நாமும் பெருமிதத்துடன் புத்தகத்தினை மூடி வைத்தேன்
#ரசித்தவை
*போர் என்பது உத்தியால் மட்டும் தீர்மானிக்கப்படுவது அன்று. கடைசி கணம் வரை அந்த உத்தியை செயல்படுத்தும் புறச்சூழல் நம்முடைய ஆதிக்கத்தில் இருக்க வேண்டும்
*ஒரு யானையின் மீது ஏற்றப்படும் ஆயுதங்களை கொண்டு 100 வீரர்களை கொண்ட படைப்பிரிவு நாள் முழுவதும் சண்டையிடலாம். அவ்வாறு ஆயுதங்களை ஏற்றி செல்ல மட்டும் 100 யானைகள் நிற்கின்றன
*நஞ்சை சேகரித்தல் எளிதன்று .மருத்துவ அறிவு எங்கு செழிப்பற்று இருக்கிறதோ அங்கு தான் நஞ்சை கையாளும் முறையும் சேகரிக்கும் முறையும் சிறப்புற்று இருக்கும்
*எதிரி படையினர் நம்மைப் போன்ற மனிதர்கள் தான் என்பது மாறி.. பேராற்றல் கொண்டவர்கள் என ஆள்மனம் நம்பிவிடும். நீரை நிலம் விழுங்குவது போல தனது வீரத்தை தானே விழுங்கிவற்றச் செய்யும்.
*மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு உள்நுழைக்கிற கருவி, சொற்களின்றி வேறில்லை
*ஒரு வேளை காற்றை எதிர்த்து கூட மேகம் பயணிக்கலாம் .ஆனால் வானத்தை விட்டு விலகிச் செல்ல கதிரவனுக்கு வழி ஏதுமில்லை
*ஒருவனின் செல்வத்தை கவர்ந்திட போரிட்டால் அந்த போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால் ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரை பாறை கொண்டு நசுக்க முடியாது
*நம்பிக்கை இருக்கும் வரை விதிகளைப் பின்பற்ற அனைவரும் பழகியுள்ளனர். ஆனால் அந்த நம்பிக்கை தகரும்போது விதிகளுக்கு எந்த முக்கியத்துவமும் இருப்பதில்லை
*வாளுக்கு உறைபோலத்தான் போருக்கு விதிகளும்.
*அதிகாரத்தின் சொல்லை மறுக்கும் ஆற்றலை இழப்பதுதான் கேடுற்ற காலத்தின் அடையாளம்
*எந்தத் தற்செயலும் தன்னியல்பில் நடப்பதில்லை. காரணஙகள் வழியே தான் காரியங்கள நிகழ்கின்றன
*போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது
*தீர்மானம் என்பது, முன் திட்டமிடல் மட்டும்தான். எந்த ஒரு முன் திட்டமுடலும் வாய்ப்புகளை மையப்படுத்தியே வடிவமைக்கப்படுகிறது
*விதிகளை கைவிடுவது பற்றியே சிந்திக்கிறாய்.. விதிகளைப் பயன்படுத்திக் கொள்வதை பற்றி நீ சிந்தி
*வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள்.
வாழ நினைப்பவர்கள்
வேறு வழியின்றி
அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்
*மனம் முடிவெடுக்க முடியாமல் குழம்பிய நிலையில் தலை மட்டும் சம்மதிக்க ஆரம்பித்தது
*தூண்டில் முள்ளை வீசுவதற்கும் கொலை வாளை வீசுவதற்கும் வேறுபாடு தெரியாதவன் முட்டாள்
*போர்க்களத்தில் இரண்டே செயல்கள் தான். ஒன்று தாக்கி அழிப்பது இன்னொன்று தப்பிப் பிழைப்பது
*செயல்களின் வேகத்தைச்சொல் நிறுத்தும். பின்னர்தான் தெரியும், அதுநிறுத்துவதற்காகச் சொல்லப்பட்ட தல்ல; செயல்களின் போதாமையை நீக்க சொல்லப்பட்டதென்று
*இழப்பையும் வலியையும் கண்ணீரையும் கடந்தால் மட்டுமே மேடேறி வந்து நன்றி சொல்ல முடியும். இக்காடு காக்கப்பட்டது
நல்லதொரு வாசிப்பு அனுபவமாய் இருந்தது தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment