#30நாள்_வாசிப்புபோட்டி_2023
#TD038
Day-24
Book-65
Pages-256
அழகிரிசாமி இலக்கியத்தடம்
-மு.பரமசிவம்
பஞ்சம் வந்துவிட்டது. பஞ்சம் வந்துவிட்டால் என்ன மக்கள் பட்டினி கிடப்பதோடு மட்டுமல்லாமல், மற்றொரு பரிதாபகரமான காரியத்தையும் செய்வார்கள். அதாவது ஒரு பஞ்ச பிரதேசத்தை விட்டு அதைவிடக் கொடுமையான மற்றொரு பஞ்ச பிரதேசத்திற்கு குடி பெயர்ந்து செல்வார்கள். பட்டினிப் பட்டாளங்கள் ஏதோ நம்பிக்கையுடன் ஒரு சாலையில் எதிரெதிர் திசையில் பிரயாணம் செய்வது பஞ்சத்தின் கோரமான அலைகடவுகளில் ஒன்று
-திரிபுரம்
மேற்காண் வரிகள் ஒரு சிறுகதையின் துவக்க வரி கதையின் ஒட்டுமொத்த சாராம்சமும் அந்த முதல் பத்தியிலேயே வந்து விடுகிறது. இந்த எழுத்தின் பலம் தான் அழகிரி சாமியின் பலம்.
அழகரிசாமி என்னும் ஆளுமை பற்றித் தான் இந்த புத்தகம். இடைச்செவல் கிராமத்தில் எஸ்எஸ்எல்சி வரை படித்தவர். இளமைக்காலத்தில் கம்ப ராமாயணம் பாரதியார் கவிதைகளை சுயமாக படித்து தெரிந்து கொண்டவர் .அப்போது ஆங்கில நூல்களை படித்துக் கொண்டிருப்பார் .1943 பிரசண்ட விகடனில் சேர்ந்தார் .முதல் சிறுகதை தொகுப்பு பேராசிரியர் கல்கியின் முன்னுரையுடன் 1952 இல் வந்தது .அதே ஆண்டில் தான் மலேசியாவுக்கு பயணம் ஆனார் மலேசியாவில் தமிழ் நேசன் பத்திரிக்கையில் 5 ஆண்டுகள் பணியில் இருந்த காலத்தில் தான் சீதாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இது ஒரு கலப்பை திருமணம் ஆகும். 1957 ல்சென்னை திரும்பியபோது காந்தி நூல் வெளியீட்டு கழகத்தில் மொழிபெயர்ப்பாக இருந்தார் .1960 இல் நவசக்தி பத்திரிக்கை துணை ஆசிரியராக இருந்தார். சோவியத் நாடு இதழிலும் பணியாற்றினார் .1970 இல் அவரின் அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்புக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ஆனால் அவர் அப்போது உயிரோடும் இல்லை. அழகிரி சாமியின் படைப்புகள் குறைவாக இருந்தாலும் அவர் படைத்தன என்றும் காலத்தால் நீங்காத இடம் பெற்றவைகள்.
அழகிரி சாமியின் ஒரே ஊர்காரரும் அண்டை வீட்டுக்காரருமான கி ராஜநாராயணன் அழகிரி சாமியின் இளமை பருவம் குறித்து ஒவ்வொன்றாய் நமக்கு சொல்லிக் கொண்டு வருகிறார். இளமை காலத்திலேயே ஆங்கில நூல் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். வீட்டில் நாங்கள் தெலுங்கு பேசினாலும் அழகிரிசாமி உடன் எப்போதும் தமிழில் தான் உரையாடுவோம். பத்தாம் வகுப்பு முடிவிற்கு பின் சர்வீஸ் கமிஷன் பரிச்சையிலும் தேறி கொஞ்ச நாள் வேலை இல்லாமல் பக்கம் பக்கமாய் புத்தகம் படித்து தள்ளுவதே வேலையாய் இருந்தான். படிப்பதில் அவனுடைய வேகத்தை யாராலும் பின்பற்ற முடியாது. அவனுடைய கண் விழிகளை கவனித்தால் இடதும் வலதுமாக கடிகாரத்தின் பெண்டுலத்தை விட வேகமாக அசையும் .நம்முடைய கண்கள் வார்த்தைகளாக கொத்தி விழுங்கினால் அவருடைய கண்கள் வாக்கியங்களாக அள்ளி விழுங்கும்
ஜெயகாந்தனின் கட்டுரையில் அழகிரிசாமி என்கிற ஐந்தடி ஏழு அங்குலம் உயரமுள்ள சிறிதே வழுக்கையான சதா நேரமும் சிரிக்கின்ற முகம் உள்ள அந்த மனிதன் .அவனிடம் பொய்மை எப்போதும் இல்லை. திருவேணி, சிரிக்கவில்லை, அழகம்மா, வெறும் தா ,ராசா வந்துட்டாரு.. நான் படித்து பரவசமூட்டி பாராட்டி நினைத்து மகிழ்ந்திருக்கிறேன் என்று அவருடைய எழுத்தை பற்றி உயர்வான வார்த்தை சொல்லுகிறார்
சிறுகதை மொழிபெயர்ப்பு ஆகியவற்றோடு பழந்தமிழ் இலக்கியத்தின் மீதும் அதிகமான ஈடுபாடு கொண்டவர். அந்த வழியில் முதல் தொகுப்பான இலக்கியச் சுவை என்ற பெயரில் 1954 இல் வெளிவந்தது. தொடர்ந்து அவர் இலக்கியத்தேன் இலக்கிய அமுதம் இலக்கிய விருந்து என்ற தலைப்புகளில் கொண்டு வந்தார். கம்பராமாயணம் அவர் அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். அவருக்கு சின்ன வயதிலிருந்து சித்திரம் வரைவது ஆசை அதிகம். ஆனால் இலக்கியத்துக்கு வந்ததும் அதை விட்டு விட்டார். அடிக்கடி படம் போடுவார் .1960 இல் நவசக்தி இதழில் பணியாற்றி ஐந்தாண்டு காலம் வேலை பார்த்தார். பிறகு அதனை விட்டு முழு நேர எழுத்தாளராக மாறிப்போனார். 1970 சோவியத் அலுவலகத்தில் சேர்ந்த சில நாட்களுக்குள்ளாகவே அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இருந்தார்.
1944 திருச்சி வானொலி நிலையம் முதன்முதலாக எழில் என்னும் பொது தலைப்பில் கவியரங்கம் ஒன்றை நடத்தியது.டி கே சி தலைமையில் நடைபெற்ற அந்த கவியரங்கத்தில் கலந்து கொண்டார். அந்த கவியரங்கில் கலந்து கொண்டவர்களில் ந. பிச்சை மூர்த்தியும், கு.ப.ராவும் குறிப்பிடத்தக்கவர்கள் அப்போதுதான் அவர்களுக்கு ள் அறிமுகம் ஆனது. அழகிரிசாமியின் கவிதைகள் இதுவரையில் புத்தகமாக வெளிவரவில்லை.
அவர் பதுப்பித்த சுந்தரகாண்டம் ஒரு ஆண்டில் 5000 பிரதிகள் விற்று சாதனை படைத்ததாக கண. முத்தையா சொல்கிறார்
மனிதநேயத்தின் இழைகள் ஒவ்வொன்றாய் அறுந்து கொண்டிருக்கும் பரபரப்பான எந்திரகதியான இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனித நேயத்தின் சிறப்பையும் மனிதனிடத்தில் அவருடைய சிறுகதைகளும் நம்மை ஈர்ப்பதில் வியப்பில்லை.
கல்கி எழுதுகிறார்.. ஒருவன் நம்பத்தகாத நிகழ்ச்சி ஏதேனும் கூறினால் என்னப்பா கதை சொல்கிறாயா? என்கிறோம் .என்னடா கதை அழக்கிறாய் என்கிறோம். கதை என்றால் எளிதில் நம்ப முடியாத அபூர்வமான நிகழ்ச்சிகள் அடங்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கத் தோன்றுகிறது.
தேவையும் தெய்வமும் கதை கடற்கரைக்குச் செல்லலாம் என்று வாதிடும் நாத்திக நண்பரையும் கோவிலுக்கு செல்ல விரும்பும் ஆத்திகரையும் பற்றியது. கடைசியில் கோவிலுக்கு செல்கிறார்கள். வெளியில் விட்டு வந்த செருப்பு பத்திரமாக இருக்க வேண்டுமே என்று அதைப் பற்றிய நினைத்துக் கொண்டிருக்கும் நாத்திக நண்பரும் ஆத்திகரும் தத்துவ ரீதியில் விவாதிக்கிறார்கள் .செருப்பை பற்றிய நினைத்ததற்காக தெய்வமே தன்னைச் சாடுவது போல அவருக்கு தோன்றுவதாக அந்தக் கதை இருக்கிறது.
அழகிரி சாமியின் கதைகளில் புதுவகையான உத்தியோ உள்ளடக்கமோ இல்லை என்பது பல விமர்சகர்களின் கருத்து. ஆனால் அதைப்பற்றி அவர் கவலைப்படவில்லை. உத்தி என்பதும் உள்ளடக்கம் என்பதும் கதைக்கு ஒரு சுமை. அது ஒரு மாயவலை. அதனுள் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை என்பதோடு புதிய உள்ளடக்கத்துடன் எழுதுபவர்களை மதித்ததும் இல்லை என்கிறார். ஆனால் பல உத்திகளோடு எழுதப்படும் கதைகள் கூட இவரின் கதைக்கு நிகராக இல்லை என்பதும் ஒரு உண்மையோடு ஒத்துக் கொள்ள வேண்டியதுதான் என்கிறார் ஆர் உமா அவர்கள்
*தமிழ் சிறுகதையில் அமைதியாக புரட்சி செய்தவர் அழகிரிசாமி
*சிறுகதைகளில் வரும் உரையாடல்களே அவற்றின் கதை பொருள் வளர்ச்சிக்கும் பாத்திரங்களின் பண்புகளை விளக்குவதற்கும் துணை வருகின்றன.
*லார்டு இர்வின் என்று ஒரு வெள்ளைக்காரன் இந்தியாவுக்கு வைஸ்ராயாக இருந்தார். அவனுக்கும் நம்முடைய அழகிரிசாமி கை இருந்ததால் செல்லையாவை லார்டு இர்வின் என்று அழைத்து வந்தோம்
*1950 ஆம் ஆண்டு கரிசல் காட்டில் பிண்ணாக்கு பஞ்சம் வந்தது. சாப்பிடுவதற்கு ஒன்றுமே கிடைக்காத போது கடலை பிண்ணாக்கை மட்டுமே உண்டு உயிர் வாழ்ந்தார்கள். கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவர்கள். மொச்சை கொட்டை வாங்கி அவித்துச் தின்றார்கள். ஆகவே இதற்கு மொச்சை கொட்டை பஞ்சம் என்று மற்றொரு பெயர் உண்டு.
பல்வேறு ஆளுமைகள் அவர் குறித்த இலக்கிய திறனாய்வுகளை இந்த புத்தகத்தில் படித்ததில் மிக்க மகிழ்வை தந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment