Thursday, 21 November 2024

புத்தகம்-27


Reading_Marathon2024
#24RM050

Book No:27/100+
Pages:295

சுஜாதா அவர்களின் வீட்டில் லாண்டரி பில்களை புத்தகமாக போட்டாலும் வாங்கும் அளவுக்கு வாசகர்கள் தயாராக இருந்தார்கள் எனில் அவர்கள் அத்தனை பேரும் நம்பிக்கையோடு நம்பியது சுஜாதா எனும் பெயரை தான். அவரின் எழுத்துக்கள் ஒரு நாளும் வாசகர்களை ஏமாற்றியதில்லை.புதுமை இளமை என எழுத்துக்களில் அவர் கொண்டு சேர்த்த அத்தனை வாசகப் பரப்பையும் சுஜாதா எனும் வார்த்தைகளில் அடக்கி விடுவார்.அப்படித்தான் மர்மமும் திகிலும் கலந்த 29 மர்ம கதைகளை அவர் இந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். ஆறு பக்கங்களில் அனைத்து எதிர்பார்ப்புகளையும் உருவாக்கி இறுதியில் இதுதான் என நம்மோடு கைகுலுக்க வைத்திருப்பார் சுஜாதா.

ஆபீஸில் உள்ள 180 ரூபாய் பணம் எடுத்து மனைவிக்கு ஒரு புடவை வாங்க நினைத்தான் ராகவன். ஆனால் நூறு ரூபாய் களவாடியது தெரிந்தால் அவன் வேலை போய்விடும். அதனால் என்ன ஊரிலிருந்து அவனுக்கு மணி ஆர்டர் வரப்போகிறது. எடுத்து விடலாம் என தைரியமாக எடுக்கிறான் .புடவையை எடுத்து மனைவியோடு சந்தோஷமாய் வெளியே போகும்போது நாளை குருநானக ஜெயந்தி தபால் அலுவலகம் விடுமுறை என நினைவுக்கு வருகிறது. எடுத்த பணத்தை வைக்க வேண்டும் என்ன செய்ய போகிறான் என்பது தான் கதை

ஆள் இல்லாத அமைதியான நள்ளிரவு என் கீழே எக்ஸ் வடிவில் ரமணன் செத்துக் கிடந்தான். ஹாக்கி மட்டையால் ஒரே அடி. உயிர் நண்பன் தான் ஆனாலும் அவன் செய்த ஒரு காரியம் ஒப்பவில்லை. விஞ்ஞானியான நான் சுவடின்றி கொன்றேன். திரும்ப வீட்டுக்கு வந்து படுத்தேன். எல்லாம் சரியாய் செய்த திருப்தி.பாக்கெட்டை தொடும் போது பர்ஸ் இல்லை.சிந்தித்து சிந்தித்து மீண்டும் ரமணன் வீட்டுக்கு செல்கிறான். பர்ஸ் கிடைத்ததா போலீசிடம் மாட்டினாரா என்பது வந்தேன் பார்த்தேன் கொன்றேன் மீதிக்கதை

டாக்சி ஓட்டும் குமாரசாமி முதலாளி ஆதியின் நம்பிக்க்கைக்கு உரியவராகி காரியதரிசி ஆகிறார். நல்ல பெயர் எடுத்து பணத்தை சுருட்டி கொண்டு ஓட நேரம் பார்த்து காத்திருக்கிறார். ஒரு முறை பெரும் தொகையை கொடுத்து வரச் சொல்லும் போது அதை எடுத்துக் கொண்டு எக்மோர் செல்கிறார் குமார்சாமி.வட நாட்டு ரயில் பிடித்து போகும்போது . தமிழ்நாட்டை தாண்டியதும்..அந்த கவரை பிரித்துப் பார்க்கிறான் அதிர்ச்சி அடைகிறான். அது என்ன என்பது சஸ்பென்ஸ் ..

தன் வீட்டின் எதிரில் புது வீடு கட்டும் சுமந்த்..கூலி ஆட்கள் மேஸ்திரி சமயம் வேலை நடக்கிறது. வேலையாள் வள்ளியும் முருகனும் காதலிக்கின்றனர். மேஸ்திரிக்கு வள்ளி மீது ஒரு கண். இடையில் மூன்று நாட்களாக முருகனை காணவில்லை. உரிமையாளரும் போலிசும் சேர்ந்து முருகனின் பிரேதத்தை கண்டுபிடிப்பதே அஸ்திவாரத்தின் கதை

பேங்கில் கொள்ளையடித்த பணத்துடனும் பாலாவும் பெர்னாடும் வேகமாய் காரில் சென்று கொண்டிருந்தனர். போலீசிடமிருந்து தப்பித்த மகிழ்ச்சி ஊரைவிட்டு சென்று விட வேண்டியது தவிப்பு இரண்டும் சேர்ந்து வாகனத்தை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றனர். இடையில் நிறுத்தி காரில் வைத்திருந்த நம்பர் பிளேட்டை மாற்றிக் கொண்டனர். செக் போஸ்டில் எம் எல் ஏ கார் என்று கூறி சாமர்த்தியமாய் தப்பிக்கிறான் பாலா
இனி கவலை இல்லை எல்லா பணத்தையும் டிக்கில் வைத்து விட்டு செல்லும்போது விதி ஒருவனை சைக்கிளில் அனுப்பியது. கண்ணயர்ந்த பாலா நிமிட நேரத்தில் அந்தப் பையனை இடித்து விட்டான். எங்கும் நிற்காமல் வேகமாக சென்று கொண்டிருந்தான். திருச்சியை நெருங்கும் போது மீண்டும் செக்கிங் இப்போது போலீஸ் வேறு ஒரு தடையத்தை வைத்து பிடிக்கிறது என்ன என்பது அகப்பட்டுக் கொள்ளாத வரை திருடின நலல கதையின் சஸ்பென்ஸ்

ராத்திரி பத்து மணிக்கு ஜுப் ஒன்று இன்ஸ்பெக்டர் துரைவேலனுடன் வந்தது. உள்ளே ஒருவர் இறந்து கிடக்கும் செய்தி அறிந்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் பேசிக்கொண்டனர். வீட்டின் உள்ளே இறங்கிய கான்ஸ்டபிள் உள்ளே தாழிடப்பட்டதை அறிந்து கொண்டு சுடப்பட்ட பிணத்தினை பார்த்து சற்று பயத்துடன் தாழ்பாளை திறந்தார். துரைவேலன் பிரேதத்தை நன்கு பரிசோதித்து அனைவரும் தற்கொலை என்று கூறும் போது அவர் மட்டும் இதில் ஏதோ வேறு ஒன்று இருப்பதாக சந்தேகிக்கிறார். அவர் நினைத்தது போலவே சந்தேகத்து இடமெல்லாம் கொலை நடந்துள்ளது அது எவ்வாறு என்பது தான் ஒரே இரவில் கதையில் மர்மம்.

தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சேகர் தன்னுடைய தந்தையும் தாயையும் சிறுவயதில் இழந்தவன். அவர்கள் தற்கொலை செய்து கொண்டதால் தற்கொலை செய்யும்போது அம்மாவின் நான்கு விரல்களை அப்பா வெட்டி விட்டார். அதனால் சிறுவனின் மனதில் நான்கு விரல்களை அப்பாவிடம் கொடுத்தால்தான் அவரின் ஆத்மா சாந்தி அடையும் என நினைத்து மூன்று பெண்களை விரல் வேண்டி கொலை செய்கிறான். நான்காவது பெண்ணை விரல் வேண்டி கொலை செய்கையில் எவ்வாறு மாட்டிக் கொள்கிறான் என்பதுதான் மறக்க முடியாத சிரிப்பு கதையின் மர்மம்.

*மனைவி சன்னமாய் குறட்டை விடுகிறாள்

*அவளை பார்த்தால் சிரிக்க வேண்டும் போலிருக்கும். பார்த்தவர் உள்ளத்தில் லேசான கிளர்ச்சியை எழுப்புவாள்.

*அருகில் ஒரு இளைஞன் கொட்டாவிய்சி மென்று கொண்டிருக்கிறான்

ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விறுவிறுப்பு. எல்லா கதைகளும் கொலைகள் கதைகள் அல்ல ஏதோ ஒரு சுவாரசியமான சம்பவத்தை பின்பற்றி நாம் அந்த சம்பவங்களை யூகித்து முடிப்பதற்குள் தனது வேறொரு முடிவை சொல்லும் சுஜாதாவின் திறமை சொல்வதற்கு அரியது .படிக்க படிக்க சுவாரஸ்யம் ஒவ்வொரு கதைகளையும் படித்து முடித்தவுடன் அடுத்த கதை எவ்வாறு இருக்கும் என்பதை நம்மளுடைய பார்வைக்கு விட்டு விடாமல் வேறொரு பாதையில் கதை போகிறது. இயல்பான நடை துள்ளலான எள்ளல என எப்போதும் போல் சுஜாதாவின் புத்தகம்  இருக்கிறது 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment