"நல்லவர்களுக்கு ஏன் மோசமான விஷயங்கள் நடக்கின்றன..?" என்று ஒருவர் கேட்டார்.
அதற்குப் பாதிரியார், "நல்லவர்களுக்கு மோசமான விஷயங்கள் நடக்கும்போது, அவர்களுக்கு என்ன நிகழ்கிறது.. என்பதுதான் உங்கள் கேள்வியாக இருக்க வேண்டும்...
நல்லவர்கள் சோதிக்கப்படும்போது
அவர்கள் 'சிறந்தவர்கள்' ஆகிறார்கள் என்பதுதான் அதற்கான என் பதில்!", என்றார்.
நம் முன்னேற்றத்தின் வேகத்தை தீர்மானிப்பது நம் அறிவு அல்ல..
அந்த அறிவை நாம் உபயோகிக்கும் விதமே நம் முன்னேற்றத்தை தீர்மானிக்கிறது.
சரியான கேள்விகளை எப்படிக் கேட்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும்போதுதான்...
நம் அறிவை நம்மால் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
'ஏன் எனக்குப் போய் இப்படி நிகழ்கிறது?'. என்ற கேள்வி சுய பச்சாதாபத்தையே உண்டாக்கும்.
மாறாக, "இதிலிருந்து நான் எதைக் கற்றுக் கொள்ளலாம்..?", என்ற கேள்வி.. உயர்ந்த பக்குவத்திற்கு உங்களை வழிநடத்தும்!
"அடுத்து என்னவாக இருக்கக்கூடும்.."
"ஏற்கனவே செய்து கொண்டிருப்பதை இன்னும் சிறப்பாக எப்படிச் செய்யலாம்.."
"மிஞ்சி மிஞ்சிப் போனால் பெரிதாக என்ன நடந்துவிடும்..."
போன்ற கேள்விகள், வாழ்வு குறித்து நீங்கள் கொண்டுள்ள கண்ணோட்டத்தை முற்றிலுமாக மாற்றிவிடும்.
அனைத்துக் கண்டுபிடிப்புகளும், கண்டறிதல்களும் சரியாகக் கேட்கப்பட்ட ஒரு கேள்வியில்தான் துவங்குகின்றன.
அர்ஜூனனின் சரியான கேள்விகளால்தான் நமக்கு 'பகவத் கீதை' கிடைத்தது!
எல்லா விடைகளும் உங்களிடம் இல்லாவிட்டால் பரவாயில்லை..
இங்கு முக்கியமான விஷயம், உங்களிடம் சரியான கேள்விகள் இருக்கின்றனவா என்பதுதான்!!
உங்கள் அறிவு காத்துக்கொண்டிருக்கிறது..
கேளுங்கள்..!!
உங்களுக்குக் கொடுக்கப்படும்..!!!
-மஹாத்ரய ரா (தாயம்)
No comments:
Post a Comment