Friday, 22 November 2024
அமெரிக்க நாட்டு நீதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின் பாரிசுக்கு போனார். பாரிசுக்கு அவர் போவது இரண்டாவது முறை. 30 ஆண்டுகளுக்கு முன் புது மனைவியுடன் தேனிலவு சென்றிருந்தார்.அந்த நகரை மூன்று நாட்கள் சுற்றி பார்த்துவிட்டு வருத்தமாக சொன்னார்.பாரிஸை பார்க்க வேண்டும் என்று எவ்வளவு எதிர்பார்ப்புடன் வந்தோம். ஆனால் இங்கு எல்லாமே மாறிவிட்டது. முன்னால் இருந்தது போல் எதுவும் இல்லை என்றால். அவர் மனைவி பெரிதாக சிரித்தார். எல்லாமே முன்பு இருப்பது போல் தான் இருக்கிறது. அப்போது நாம் இளைஞர்களாக இருந்தோம். இப்போது நமக்கு வயதாகிவிட்டது. பாரீஸ் அப்படியேதான் இருக்கிறது என்றார்.உலகம் அப்படியேதான் இருக்கிறது நீங்கள் தான் மாறிக் கொண்டிருக்கிறீர்கள் -ஓஷோ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment