#Reading_Marathon2025
#25RM055
Book No:15/100+
Pages:-161
காந்தி வழி
-என்.சொக்கன்
மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையானமுறையில் அறிமுகப்படுத்தும் நூல் தான்.இது அப்படியே இல்லாமல் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு ஏற்றவாறு செப்பனிட்டு கொடுத்துள்ளார்.ஒரு வீட்டைக் கட்ட பலரும் உழைத்திருக்கிறார்கள்; அப்போது நாம் இந்த இடத்தில் இல்லை; அவர்களுடைய உழைப்பைப் பார்க்கவில்லை; அதேசமயம், அதைப்பற்றி யாராவது சொல்லும்போது நெகிழ்ந்து நிற்கிறோமே அது போலத்தான் காந்தியைப் பற்றிய பிம்பமும் என ஆரம்பத்திலேயே காந்தியை அறிமுகப்படுத்துகிறார்.
அடிதடியை வன்முறையை கையில் எடுத்தவர்களையும்,கோரிக்கை வைத்தவர்களையும் எளிதில் புற்ந்தள்ளியது. ஆனால் காந்தி மக்கள் போராட்டமாய் மாற்றினார். அதற்கான வழி சத்தியாகிரகம் என பெயரிட்டார். அதற்கானபெயர் காரணத்தை இந்நூலில் விளக்கியுள்ளார்.
இன்றுவரை நமக்குள் இருக்கும் கேள்வி
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நான் என்ன செய்யவேண்டும்? மன்னித்துவிடவேண்டுமா, அல்லது, அழித்துவிடவேண்டுமா?இது வெளிப்புறத்தில் நாம் நாகரிகமான பதிலை தேர்ந்தெடுத்தாலும் நமக்குள் இருக்கும் மனது எதைத் தேர்ந்தெடுக்கும் என்பது நமக்குத் தெரியும்.
அதற்கான விடையை தக்க சான்றின் படி இதில் விளக்கியுள்ளார்.மனக்கட்டுப்பாட்டுடன் தன் ஆசிரமத்தில் இருந்த அம்புஜம்மாள் உணர்வை ஒரு சம்பவத்தின் மூலம் கூறியுள்ளார்.
கஸ்தூரிபாய்க்கு உடலநலமின்மை ஏற்பட்ட காந்தி கூறிய எளிய மருத்துவ முறையில் அவரிடம் கண்ட மாற்றத்தை சொல்லியுள்ளார்.அது போல் மன்னர் ஒருவரும் இளவரசனும் உரையாடும்போது எந்த நாட்டு ராஜாவை கண்டு பயம் என்கிறார்? எனக்கு உட்பகைவர் கண்டுதான் பயம் என்கிறார். அது என்ன பயம் என கூறியது சிறப்பு.
ஒவ்வொரு மனிதனும் தூய்மையைப் பேணவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். கழிப்பிடத்தை தன் மனைவியை வைத்தே சுத்தம் செய்தார் என்பதை படித்துள்ளோம். இப்புத்தகத்திலும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடம் வருகிறது.ஒருமுறை, வெளிநாட்டுக்காரர் ஒருவர் காந்தியிடம் கேட்டார், ‘உங்களை ஒரு நாளைக்குமட்டும் இந்திய வைஸ்ராயாக நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’‘வைஸ்ராய் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் தூய்மைப்பணியாளர்களுடைய வீடுகளைத் தூய்மைப்படுத்துவேன் என்றார்.
‘நாம் அனைவரும் தூய்மைப்பணியாளர்கள்தான்’ என்கிற எண்ணத்தைச் சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவர் மனத்திலும் பதிக்கவேண்டும் என்று காந்தி விரும்பினார்.
உறுதிமொழி சொல்லும்போது 'இயன்றவரை' என்ற சொல் பொருந்தாது என்கிறார் காந்தி. அதற்குப்பதில் 'எப்போதும்' என்ற சொல்லைப் பயன்படுத்தச்சொல்கிறார். அதாவது, 'என்னால் இயன்றவரை உண்மை பேசுவேன்' என்று சொல்வதற்குப்பதில் 'எப்போதும் உண்மை பேசுவேன்' என்று உறுதியெடுத்துக்கொள்ளச்சொல்கிறார்.
கைத்தொழிலுக்கு உதவுவதையும் சுதேசி கொள்கையிலும் உறுதியாக இருந்தார்.காந்தியடிகளின் சுதேசிக் கொள்கை பொருள் வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை, சேவைபுரிவதிலும் சுதேசிக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்கிறார் அவர்.
*போராட்டத்துக்காக அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம், Passive Resistance. அதாவது, எதிரியை அடித்துத் தாக்காமல், வன்முறையில்லாமல் அமைதியானமுறையில் எதிர்த்துநிற்பது.
*உண்மை நிலையானது. அதிலிருந்து கிடைக்கும் அறிவும், அந்த அறிவிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியும் நிலையானவை. யாராலும் எதனாலும் அவற்றை அழிக்க இயலாது.
*‘பொதுவாக, உண்மையைப் பின்பற்றுவது என்றால், உண்மையைப் பேசுவது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைக்கு இன்னும் விரிவான பொருள் உண்டு’ என்கிறார் காந்தி. ‘எண்ணத்தில் உண்மை வேண்டும், பேச்சில் உண்மை வேண்டும், செயலில் உண்மை வேண்டும்!’
*‘மனம் தானாகத் திரிந்தால் பரவாயில்லை, உங்களுடைய அனுமதியோடு திரிந்தால் அது உங்களுடைய பிழைதான்’
*‘நம்முடைய உண்மையான தேவைகள் என்னென்ன என்பதை நாம் எப்போதும் அறிந்திருப்பதில்லை’ என்கிறார் காந்தி. ‘இன்னொருபக்கம், நம்முடைய விருப்பங்களை நாம் பலமடங்காகப் பெருக்கிக்கொண்டே செல்கிறோம்’ என்று கண்டிக்கிறார்.
காந்திய வழி என்பது அகிம்சை என்பதோடு நற்பண்புகளை உருவாக்கி நல்ல மனிதனாக வேண்டும் என்பதே. அது சமூகத்தில் பரவும்போது நல்ல குடிமகனாக உதவும் என நம்பினார்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment