Wednesday, 25 April 2018

மணி

ஒரு கவிதை எத்தனைப் படித்தாலும் உங்களுக்குப் புரியவில்லையென்றால்,
விட்டுவிடுங்கள். கவலைப்படவேண்டாம்.ஏனெனில், அது, உங்களுக்காக, எழுதப்பட்ட கவிதை அல்ல
-மனுஷ்யபுத்திரன்

படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறந்த கதையல்ல
#சுஜாதா

ஓர் அறையில் கடந்து போனது என் காமம்! #சிலேடை"

-இளந்தென்றல்

ஜோசியக்கிளிகள்
சீட்டு எடுக்க மறுக்கின்றன
பங்களா நாய்கள்
காவல்காக்க மறுக்கின்றன

பட்டினிபோட்டால்
மிருகங்கள்
வேலை செய்ய மறுக்கின்றன

காளைமாடுகள்
வண்டியிழுக்க மறுக்கின்றன

நாம்
பட்டினி கிடக்கிறோம்
பாடுபடுகிறோம்

-மு.சுயம்புலிங்கம்

# அறிந்திராத
புதிய எண்ணின் அழைப்பு
அலைபேசியின் அந்தப்புறம்
மிகப்பழகிய மௌனம்

நல்லாருக்கியா? என்கிறேன்
'ம்ம்ம்' என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.

அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு கேட்க வேண்டியிருந்தது,
காலத்திற்கு தவிர்க்கவேண்டி.

-யாத்திரி

No comments:

Post a Comment