[15/08, 7:57 am] மணிகண்ட பிரபு: செயலில் உயிர்பெறாத சொல்
குறைந்த பட்சம்..
வயதுக்கு வராத கிழவி!
அதிகபட்சம்..
புதைக்க இடம் கிடைக்காத பிணம்!
-வலம்புரி ஜான்
[15/08, 1:05 pm] மணிகண்ட பிரபு: சுதந்திரம் நாம் பெற்றுவிட்டோம், இனி எந்த தவறு செய்தாலும் ஆங்கிலேயர் மீது பழி போட முடியாது
#ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் சுதந்திர உரை
[16/08, 7:16 am] மணிகண்ட பிரபு: மூவேந்தர் கொடி தொடங்கி,
மூவர்ணக் கொடி வரையில்
எல்லாக் கொடிகளும் பறப்பது'
எந்த நூலில்?
பூணூலில்!
-இன்குலாப்
[16/08, 7:17 am] மணிகண்ட பிரபு: எது வேரில் கசக்கிறதோ
எது இலையில் துவர்க்கிறதோ
அதுவே கனியில் இனிப்பாகிறது
-ஜெயமோகன்
[16/08, 7:22 am] மணிகண்ட பிரபு: மழைதான் பெய்கிற நேரத்தை அழகாக தேர்ந்தெடுத்துக் கொள்கிறது
-வண்ணதாசன்
[17/08, 10:37 am] மணிகண்ட பிரபு: ஒரு நிமிடத்திற்கு யாரேனும்
அறுபது நொடியென்றால்
நம்பவே முடிவதில்லை இப்போது.
ஒரு நிமிடத்தை
ஒரு நிமிடமாய்
இருக்கவிட்டதில்லை
எப்போதும் நாம்.
-படித்தது
[19/08, 7:08 am] மணிகண்ட பிரபு: தனிமனித வழிபாடு மந்தைக் கூட்டத்தை உருவாக்குமே தவிர சிந்தனைவாதிகளை உருவாக்காது
-படித்தது
[19/08, 7:12 am] மணிகண்ட பிரபு: நிராகரிக்கப்பட்டவர்களால்தான்
உலகம் இயல்பாக
இயங்கிக்கொண்டிருக்கிறது
ஆசிர்வதிக்கப்பட்டவர்களால் அல்ல
-சௌவி
[20/08, 7:06 am] மணிகண்ட பிரபு: நெடுங்குகை இருளுக்குள்
முடிவற்றுப் போய்க் கொண்டிருக்கிறான்
ஓடும் ரயிலில்
புல்லாங்குழல் வாசிக்கும்
கண் தெரியாத இசைஞன்
-கலாப்ரியா
[20/08, 8:50 pm] மணிகண்ட பிரபு: சில சமயம் இரவில் கண்விழிக்கும்போது,
அதிசயமாய்ப் போதை தெளிந்து,மிகத் துல்லியமான ஒரு மனநிலை ஏற்படும். முன்னும் பின்னும் மனம் பெண்டுலம் போல அசையும்.அந்தக் கணம் வரை செய்துவந்தவை முழுக்க எப்பேற்பட்ட அற்பத்தனங்கள் என்று மனம் திடுக்கிடும்.அந்த அற்பத்தனங்களுக்காய் உள்ளூறத் தன் மனம் வெட்கிச் சுருண்டு கொள்வது தெளிவாய் தெரியும்
-ஜெயமோகன்
No comments:
Post a Comment