[19/06, 5:49 pm] Mani: சிந்திப்பது படைப்பதற்கே.
அதைத்தவிர வேறு படைப்பேதுமில்லை.ஆனால் முதலாவதாக படைத்தல் என்பது சிந்தனையில் சிந்திப்பதை தோற்றுவிப்பதே."
-டெல்யுஸ்
[19/06, 6:09 pm] Mani:
தற்போது ஓரமாய்
நடுரோட்டில்
நசுங்கிய நாய்.
-துரை.நந்தகுமார்
[19/06, 9:41 pm] Mani:
பகிரப்படாத நேசத்தின்
துயரென்னைத் தின்கிறது
தனக்குத்தானே கட்டிக்கொண்ட
கைகளின் தனிமை போல
-தமிழச்சி தங்கப்பாண்டியன்
[20/06, 7:18 am] Mani:
பொருளுக்கு இரையாகுபவன் உண்மைப் பொருளைக் காணமாட்டான். அதுவே எல்லா வகை மயக்கத்திற்கும் அடிப்படைக் காரணம்.இதுதான் முதலாளியம் வளர்த்த பெரும் மயக்கம
-கார்ல் மார்க்ஸ்
[20/06, 7:54 am] Mani:
வேண்டாத எண்ணங்கள் மனதில் அடையாத வரை
எல்லா காலமும் சிறப்பானதே
எல்லா மனிதர்களும் மகிழ்ச்சியானவர்களே.!
-ஜப்பானிய கவிதை
[20/06, 7:12 pm] Mani:
அ வுக்கு முந்திய எழுத்துக்கள் இல்லையெனினும், அ எழுதப்பழகிய என் கிறுக்கல்களெல்லாம்,அ வுக்கு முந்திய எழுத்துக்களே
-தபூசங்கர்
[21/06, 6:59 am] Mani:
'கொஞ்சமாகத் தெரிந்துகொண்டிருக்கும்போது தெரிந்து கொண்டுவிட்டோம் என்றும், அதிமாகத் தெரிந்துகொள்ள முற்படும்போது தெரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் ஏற்படுகிறது. ஒரு கதவு திறக்கும்போது திறக்காத பல கதவுகள் தெரியும் விசித்திரக் கோட்டை இது. அவற்றையும் திறக்கும்போது மேலும் பல கதவுகள் மூடிக்கிடப்பதை பார்க்கிறோம். அப்படியானால் இதற்கு முடிவு என்ன ? திறப்பதே திறக்காத கதவுகளை பார்க்கத்தானா ? பெரிய சவால்தான் இது'.
-சுந்தரராமசாமி
ஜே.ஜே. சில குறிப்புகள்
No comments:
Post a Comment