உச்சரிக்கும் போது உதடு ஒட்டாத குறள்கள்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'
யார் ஒருவர் ஒரு குறிப்பிட்ட பொருள் மீது அதிகப் பற்று வைக்காமல் இருக்கிறாரோ அவருக்கு, அந்தப் பொருளால் தீங்கு எதுவும் நேராது என்பது பொருள்.
*நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
இந்தக் குறட்பாவும் உதடுகள் ஒட்டாத திருக்குறள்தான். உச்சரிக்கும்போது உதடுகள் ஒட்டாத திருக்குறளை 'இதழகல்' குறட்பாக்கள் என்றும் சொல்வார்கள். இதழ்கள் ஒட்டாமல் அகலுவதைத்தான் இப்படிக் குறிப்பிடுகிறார்கள்.நிறைய குறள்கள் உள்ளன
#info
No comments:
Post a Comment