Thursday, 22 October 2020

மாட்டு வாகடம்-போகன் சங்கர்

மாட்டு வாகடம்
-போகன் சங்கர் Bogan Sankar

நண்பருக்கு சகிக்க முடியாத உடல்வலி.எத்தனை மருத்துவரிடம் சென்றும் நோய் மட்டும் செளக்கியமாய் இருந்தது.டாக்டருக்கெல்லாம் டாக்டர் ஒருவர் இருக்கிறாரென நண்பர் பரிந்துரைத்தார்.ஊர் எல்லையில் அடர் இருளில் விசாலாமான கேட்டினை கதறக்கதற திறந்து கொண்டு உள்ளே போனோம். டாக்டர் எங்கே என ஒரு பெண்ணிடம் கேட்க பின்னால் கேட்க டாக்டர் மாட்டுத் தொழுவத்தில் இருந்ததாய் பதில் வந்தது.

அப்போதுதான் தெரிந்தது அவர் மாட்டு டாக்டரென.ஆரு என்ற குரல் கேட்ட வழியே சென்றபோது சாணி மிதித்து நகர முடியாத செஸ் காய்களைப் போல் நின்றோம்.டாக்டர் வந்தவுடன் வைத்திய வரலாறை கூறினோம்."ஒரு வெயில்ல அலை" வைட்டமின் டி குறைப்பாடு வேற ஒன்னுமில்ல.மருந்து சீட்டு ஒன்று கொடுத்து கால்நடைத் தீவனம் வாங்கிவா என பணித்தார். வாங்கி சென்றபோது நண்பனை காணவில்லை.டாக்டர் அவரை கொஞ்சம் தழை பறிக்கக் கூட்டிட்டுப் போயிருக்காராம்.

*ஒரு சாதாரண நிகழ்வை தனக்கேயுரிய நகைச்சுவையுடன் சொல்லியிருப்பார்.

No comments:

Post a Comment