Thursday, 17 December 2020

படித்தது

நாய்களுக்கான ஒரு அறிவு மனிதனுக்கில்லை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
"நாய்கள் பார்த்த மாத்திரத்திலேயே தங்களிடம் அன்புள்ளவர்களையும், அன்பில்லாதவர்களையும் தெரிந்து கொண்டு விடுகின்றன

-க.நா.சு


விலா எலும்பு கோணலாக இருந்தால்தான் பயன்படும். அதற்காகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.அதை நேராக்க முயல கூடாது. முயன்றால் உடைந்துவிடும். பெண்களுடைய குணங்களும் நமக்கு கோணலாகத் தெரியலாம்.அவற்றை மாற்ற முயலகூடாது.ஏனெனில் அவை தேவை கருதியே அவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது

-அப்துல்ரகுமான்



கண்டெனன்,கற்பினுக்கு அணியை,கண்களால்,
தெண் திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்.

#கண்டேன்.கற்பினுக்கு அணியாக இருக்கிறாள்.என் கண்களால் கண்டேன்.கண்ட இடம் இலங்கை.

-அனுமன்

No comments:

Post a Comment