Reading_Marathon2024
#24RM050
Book No:25/100+
Pages:231
பரிணாமத்தின் ஊடாக வாழ்க்கையின் விளக்கம்
-புரோசாந்தா சக்கரவர்த்தி
தமிழில் குமாரசாமி
இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கிய மிக முக்கியமான புத்தகத்தில் இதுவும் ஒன்று.பரிணாமம் என்று சொல்லை பலர் பல்வேறு விதத்தில் சொல்லியுள்ளனர். அந்த பரிணாமத்தில் சொல்லப்படாத விஷயங்கள் கேட்டறியாத தகவல்களை இந்த புத்தகம் மிகவும் சுவைபட சொல்லி இருக்கிறது.
ஹாய் மதன் பகுதியில் ஒருவர் ஏன் இன்று குரங்கிலிருந்து மனிதன் தோன்றுவதில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு அவர் ஒரு மரத்தின் ஒரு கிளைகள் கிளையிலிருந்து வரும் கிளையில் ஒரு குரங்கினம் நிமிர்ந்து நின்றதால் தான் அந்த இனம் பரிணாம வளர்ச்சி அடைந்தது. எல்லா குரங்கும் எழுந்து நிற்கவில்லை. ஒரே ஒரு குரங்கினம் எழுந்து நின்றதால் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து ஒரு மனித இனம் தோன்றியது என்று கூறி இருப்பார்.
இந்த உலகை படைத்தது கட்டுப்படுத்துவது கடவுள் என்றால் அதை உங்களால் மெய்ப்பிக்க முடியாது பொய்பிக்கவும் முடியாது. ஆனால் அறிவியல் பூர்வமாக அணுகினால் அதன் உண்மை விளக்கத்தை நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்ற முன்னுரையில் இருந்து இப்ப புத்தகம் துவங்குகிறது. ஏன் ஆப்பிள் கீழே விழுகிறது என்று கேள்விக்கு கடவுள் அவ்வாறு விழும்படி செய்தார் என்று நீங்கள் பதில் அளித்தால் அது தவறு என்று என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் புவியீர்ப்பு விசை தான் காரணம் என்று என்னால் கூற முடியும். அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட கேள்விகள் அனைத்திற்குமான விடையை புத்தகம் சொல்கிறது.
ஒரு ஆய்வாளரான ரிச்சர்ட் லென்ஸ்கி என்பவர் பாக்டீரியாவை பரிசோதனை பரிசோதனைச் சாலையில் 70 ஆயிரம் தலைமுறைக்கு மேலாக வளர்த்த போது அந்த பாக்டீரியா தன்னை பெரும் அளவு தகவமைத்துக் கொண்டிருந்தது அதனை தவறாக புரிந்து கொண்டவர் அது மனிதனாக மாறிவிட்டதாய் தவறாய் கூறினார். ஆனால் ஒரு மனிதனாக பரிணாம வளர்ச்சி அடையப் போவதில்லை.
பரிணாம வளர்ச்சிச் செயல்முறையின் விளைவை, இன்று உயிர்பிழைத்திருப்பவர்களின் வடிவில் நாம் காண்கிறோம். அவர்களிடம் சிறிய அளவில் மட்டுமே மாற்றம் ஏற்பட்டிருப்பதால், ஒரு மூதாதையரிலிருந்து மறுமூதாதையர் என்று உங்களால் பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்க முடியும். அதற்கான சான்று, மரபணுக் குறியீட்டில் (டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ) அடங்கியுள்ளது. அதை நாம் கண்ணால் காண முடிகின்ற, இரத்தமும் சதையுமான வடிவிலும் நடத்தையிலும் நாம் பகிர்ந்து கொள்கிறோம்.
மொத்த பரிணாம வளர்ச்சியும் இயற்கை தேர்ந்தெடுப்பு கோட்பாட்டின் மூலம் விளக்க முடியாது என்பதை டார்வின் அறிந்திருந்தார். அதற்காக பாலியல் தேர்ந்தெடுப்பு கோட்பாடு ஒன்றை டார்வின் உருவாக்கினார் .அதேபோல டார்வின் மற்றொரு இடத்தில் பரிணாம வளர்ச்சியை மாறுதலுடன் கூடிய மரபுவழிப்போக்கு என்று பொருத்தமாகும் சுருக்கமாகவும் விலக்கியுள்ளார். உயிரினங்கள் ஏன் வேறுபடுகின்றன என்பதை விளக்குவதற்கு நமக்கு வேறு சில பரிமாண வளர்ச்சி கோட்பாடுகள் தேவை என்பதை உணர்ந்து இருந்தார்.
உங்களிடம் ஏற்படுகின்ற மாற்றங்களை பொறுத்தவரை தவறுகள் ஏற்படாமல் புதிய வகைகள் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை என்பதை டார்வினும் மெண்டலும் அறிந்திராத ஒன்று .உங்களுடைய டிஎன்ஏ குறித்து ஏற்படுகின்ற தவறுகள் மரபணு சடுதி மாற்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அது குறித்த விரிவாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
புதிய இனங்கள் உருவாவதற்கு இனத்தோற்றம் நடைபெறுவதற்கு வேறு ஏதேனும் வழிவகை உண்டா? என்பதற்கு தனிமை படுத்துதல்+ நீண்ட காலம் என்று இரண்டையும் சொல்கின்றனர். ஒரு இனத்தை பிரித்து தனிமைப்படுத்தி காலப்போக்கில் சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதன் மூலம் மாற்று வழிகள் மூலமும் மரபணு விரிவுறும் என்று கூறுகின்றனர். ஆனால் ஒரு சிலவற்றில் இருக்கும் குறைபாடுகளையும் கூறி பரிணாம வளர்ச்சியின் படங்களை இட்டு அந்தப் படங்களின் மூலம் விளக்கியுள்ளனர். முக்கோண வடிவிலான படத்தில் ஏ யிலிருந்து பிரியும் பி,சி உருவெடுப்பதாகவும் அதற்கான விளக்கத்தையும் சொல்லியுள்ளனர்.
*நாம் சுறாக்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையவும் இல்லை. ஆனால் மிக நீண்ட காலத்துக்கு முன்னால் நமக்கும் சுறாவுக்கும் பொதுவான ஒரு நீர்வாழ் மூதாதைய விலங்கு ஒன்று இருந்துள்ளது.
*நமக்கும் சிம்பன்சிக்கும் இடையேயான பொதுவான மூதாதையர் விலங்கு ஆறிலிருந்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.
*லாமார்க் என்னும் அறிவியல் ஆனால் ஒவ்வொரு உயிரினமும் தம்முடைய தனிப் பண்புகளை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்றன என்பதை கூறி இருந்தார். உதாரணத்துக்கு ஒட்டகச்சிவிங்கி கழுத்தை நீட்டியதால் தான் அது நீண்டிருப்பதாக கூறி இருந்தார் அதனை ஆய்வுகளின் மூலம் மறுத்திருக்கின்றனர்.
*டார்வின் மற்றும் வாலஸ் இருவருமே உயிர் பிழைத்தலுக்கான போராட்டம் மற்றும் விடாமுயற்சியின் மூலமாக ஏற்கனவே இருக்கின்ற இடத்திலிருந்து புதிய உயிரினங்கள் தோன்றுகின்றன என முடிவுக்கு வந்தனர்.
வினாக்களும் தவறான புரிதல்களும் பகுதியில் கங்காரு இரு காலுள்ள விலங்குகள் தானே அவைகள் ஏன் மனிதனாக முடியவில்லை.. முட்டையிடும் விலங்குகள் குட்டியிடும் விலங்குகள் என ஏன் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கான விடைகளும் இப்புத்தகத்தில் உள்ளன.
*மெண்டல் முதலில் பட்டாணி செடிகள் தன் ஆய்வுகளை துவக்கியது அவருடைய அதிர்ஷ்டம் என்று கூறலாம். அச்செடியில் பூக்களின் நிற வேறுபாடு போன்ற தனித்துவமான அம்சங்கள் இருந்தது. அவர் தன் முடிவு வெளியிட்ட வசதியாக இருந்தது. அவர் தேனீக்களை வைத்து இது போன்ற ஆய்வுகளை வெற்றி பெற முடியவில்லை ஏனெனில் தேனீக்கள் சிக்கலான பரம்பரை பண்புகளைக் கொண்டிருந்தன.
*இன்று உயிரோடு இருக்கின்ற அனைத்து விலங்குகளும் பரிணாம போராட்டத்தில் தப்பி பிழைத்தவர்கள்.
*தக்கன பிழைத்துக் கொள்ளும் எனும் சொல்லாடலை முதலில் பயன்படுத்தியது ஹெர்பர்ட் ஸ்பென்சர்.அது வசீகரமாய் இருந்ததால் டார்வின் தனது ஐந்தாம் பதிப்பில் அதைச் சேர்த்துக் கொண்டார்.
இதில் தக்கன என்பதற்கு வலியவன் வெல்வான் என அர்த்தப்படுத்துகின்றனர்.இது நாம் பிற விலங்குகள் நடத்தும் விதமும், நாம் ஒருவர் மீது ஒருவர் நடத்தும்விதமும் பெரும் தாக்கம் ஏற்படுத்துகிறது. உயிரியலாளர்கள் இனப்பெருக்க தகுதி என்று சொல்கின்றனர்.உடல்ரீதி அல்ல.இன மேலாதிக்கம்
பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும்? உயிரினங்களின் வரலாறு, பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்வது ஏன் முக்கியம் என்பன உள்ளிட்ட கேள்விகளுக்கு தகுந்த ஆதாரங்களுடனும் மேற்கோள்களுடனும் அறிவியல் பூர்வமான தகவல்களுடனும் படிக்க படிக்க சுவாரசியமா இப்ப புத்தகம் நமக்கு சொல்கிறது. சிக்கலான விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் போது..அறிவியல் பூர்வமான தகவல்களும் அறிவியல் சொற்களும் மூலம்தான் நமக்கு சொல்லியாக வேண்டும். ஆனாலும் அது எந்த இடத்திலும் கடுமையாக இல்லாமல் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் மற்றவர்களுக்கு சொல்லும் படியும் உள்ளது புத்தகத்தின் பெரிய வெற்றியாக பார்க்கிறேன்
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு