என்ன விளையாட்டு பிடிக்கும் என்று
கண் நிறைய மை தடவிக்கொண்டு வந்த
U.K.G பெண்ணிடம் கேட்டாள்
குழந்தைகள் நிகழ்ச்சி நடத்தியவள்.
யோசித்து மெதுவாக,
‘’ஓடிப் பிடிச்சி’ என்றாள்.
யாருடன் விளையாடுவாளாம்?
‘அகி கூட’ என்றாள்.
‘அகி’ என்றால் அகிலாவா?
தலை ஆட்டினாள்,
ஆமாம் என்றோ இல்லை என்றோ.
யாராம் அந்த அகி?
ஸ்கூல் ஃப்ரண்டா? இல்லையா?
அப்போ அக்காவா?அதுவும் இல்லையா?
பக்கத்து வீட்டுப் பெண்ணோ?
பின்னே யாராம்?
‘தெரியாது’ என்றாள் மெதுவாக.
முதலில் சிரித்தாலும்
அப்புறம் புரிந்துகொண்டேன்.
#முகுந்த்_நாகராஜன்
No comments:
Post a Comment