Friday, 20 January 2017

கவிதை

நீ துண்டித்த தலையை
மக்கள் எனக்குத் திருப்பி தருவார்கள்
நீ தோண்டியெடுத்த கண்கள்
காலத்தின் விழிகளாகும்
நீ வெட்டியெறிந்த விரல்கள்
ஒடுக்கப்பட்டோரின் சகாப்தத்தை எழுதும்
மக்களின் உயிர்மூச்சை கொண்டு
வரலாறு உனது தற்காலிக வெற்றிகளுக்கு
நிரந்தர சமாதி கட்டும்
-சிவசாகர் (ஆந்திரா )
தமிழில் :எஸ்.வி.ராஜதுரை & வ.கிதா

No comments:

Post a Comment