Thursday, 26 January 2017

படித்ததில் பிடித்தது

சுதர்சன் பதிவு

காற்று வெளியிடை கண்ணம்மா
நிந்தன் காதலை எண்ணி தவிக்கின்றேன்
அமுதூற்றினை ஒத்த இதழ்களும்
நிலவு ஊறித் ததும்பும் விழிகளும்

"காற்று வெளியிடை" என்பதற்கு வள்ளுவன் இப்படிச் சொல்கிறார்.
காற்றும் புகாதபடி அணைத்துக்கொள்ளல் காதலர்க்கு அழகு. அப்படி அணைத்துக்கொள்ளும்போது அவள் துன்புறுவாளோ என்று எண்ணிக் கைகளை மெதுவாகத் தளர்த்துகிறான். இப்போது இடையே குளிர்ந்த காற்று நுழைகிறது. இந்த இடைவெளிகூட பொறுக்காத அவள் கண்கள் துன்பப்படுகிறது. அப்படிப்பட்டதுதான் என் கண்ணம்மாவின் காதல். இடைவெளி இல்லாது அணைத்துக்கொள்ளும் அவள் காதலை எண்ணிப் பார்க்கிறேன். அல்லது எங்கும் வியாபித்தவள் என்றும் பொருள் கொள்ளலாம். இரண்டு சொற்களுக்குள்ளே எத்தனை ஆழம்!

No comments:

Post a Comment