Saturday, 29 April 2017

சிவதி பதிவு

"தன்னோடு" என்கிற கந்தர்வனின் கதையில் அலுவலகத்தின்
தனிமையில் இருக்கும் போது  'குக்கூ..' என  பறவையின் ஒலி காதில் விழ மயங்கிப்போவான் ஒருவன்.

அவனைத்தவிரவும் அதை சிலாகிக்க யாரும் இல்லாமல் போவது அவனுக்கு சோர்வளிக்கும்.

நாட்கள் கடக்க, கடக்க கடைசியாக மேலும் இரு நண்பர்கள் காதிலும் 'குக்கூ' விழ.. அவர்களும் வேலை மறந்து ஒன்றிப்போவார்கள்.

தன்னோடு இருவர் ஒத்த அலைவரிசையில் சேர்ந்ததில் மனம் துள்ளி குதித்து மகிழ்ச்சிக்கடலில் மூழ்குவான்.

அதுபோலவே படித்ததை, 
பிடித்ததை,
நினைவில் கலந்ததை,
நெஞ்சில் நிறைந்ததை, 
நேரம் சென்றதை,
கற்றதை,
பெற்றதை என...

காலம் கற்பூறமாய் கரைய கரைய
விடிய விடிய பேசித்தீர்க்கிறோம் நானும் நண்பர் மணிகண்ட பிரபுவும் ( Mani Tnptf)

நட்புக்கு வானமே எல்லை! # சிவதி

No comments:

Post a Comment