Sunday, 29 October 2017

ப.பி-சதீஸ்

உயிர்மரம்

வானத்தின் மதகுகள்
திறந்துகொண்டன.
நீ வேண்டாத என் பிரியமாய்
தன்னை இறுகப் பூட்டியிருந்தது நிலம்.
பச்சையம் நிறைந்த இலையை,
நரம்புகளில் பாயும் 
உயிர் வளியை,
பெரும் விருப்போடு
கைகளில் சுமக்கிறேன்.
இலைகளில் மறைந்திருக்கும்
வனத்தின் தண்மையாய்
சொல் இறங்குகிறது.
பட்சிகள் ரீங்கரிக்கும் 
குரல்களில் வழிகிறது
தாங்கள் குடியேற இயலாத
ஆதிக்கூட்டின் பாடல்.
இந்த உலகைத் தன் 
பசும் நீரினால் 
களங்கமற்றதாக்குகிறது
உயிர் வரி தரித்த மரம்

- ரோஸ்லின்

No comments:

Post a Comment